மேலும் அறிய

Rajiv Case: விடுதலை செய்யக் கோரும் நளினி மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

எழுவர் விடுதலை தொடர்பான எந்தவொரு  அரசாணையும் வெளியிடப்படவில்லை. எனவே, விடுதலை செய்யக் கோரும் மனுதாரர் நளினியின் மனு சட்டப்படி செல்லாது - தமிழக அரசு

ஆளுநரின் முடிவுக்காகக் காத்திராமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என நளினி தாக்கல் செய்த மனுவின் விசாரணையை 3 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.  

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரகத் தலைவருக்கு இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் அவர்கள் குடியரசுத் தலைவருக்கு  தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்தார். 

இந்நிலையில், சிறையில் வாடும் நளினி, ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழுபரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதில்மனுத் தாக்கல் செய்த தமிழக அரசு," எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய குடியரசுத்  தலைவருக்குத் தான் இருக்கிறது என்ற ஆளுநரின் முடிவை மத்திய அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், எழுவர் விடுதலை தொடர்பான எந்தவொரு  அரசாணையும் வெளியிடப்படவில்லை. எனவே,விடுதலை செய்யக் கோரும் நளினியின் மனு சட்டப்படி செல்லாது" என்று தெரிவித்தது.


Rajiv Case: விடுதலை செய்யக் கோரும் நளினி மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

மேலும், இந்த மனுவில் Maru Ram versus Union of India (1980) வழக்கின் வாதங்களை மேற்கோள் காட்டிய தமிழக அரசு, " அரசாணை இல்லாமல் இவர்களை விடுதலை செய்யமுடியாது. ஆளுநர் மற்றும்  குடியரசுத் தலைவரின் குற்ற மன்னிப்பு வழங்கும் அதிகாரம்  எதேச்சையானதல்ல. இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, குற்ற மன்னிப்பு வழங்கும் நடைமுறையை விரைந்து முடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. மனுதாரர் நளினியும் தனது மனுவில் இதே வழக்கை சுட்டிக் காட்டி, " 161வது சட்டப்பிரிவின்படி, ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் தன்னை விடுவிக்க வேண்டும்"எனக் குறிப்பிட்டார்.       

சிக்கலை ஏற்படுத்தும்:  

தமிழக அரசின் இந்த போக்கு எழுவர் விடுதலையில் மிகுந்த சட்ட சிக்கலை எற்படுத்தும் என்று பல்வேரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெற்றிட அனைத்து முயற்சிகளையும் திமுக மேற்கொள்ளும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. முதல்வராக பதிவியேற்ற பிறகு,கடந்த மே மாதம் எழுவர் விடுதலையில் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.


Rajiv Case: விடுதலை செய்யக் கோரும் நளினி மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

இந்த கடிதம், தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது என்ற ஆளுநரின்  நிலைப்பாட்டை மறைமுகமாக உறுதிபடுத்துவது போல் அமைந்தது. இதற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட கண்டன அறிவிப்பில், " 161வது சட்டப்பிரிவின்படி, எழுவரையும் விடுவிக்கத் தங்களுக்கு உரிமையிருக்கிறது என்பதை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு குடியரசுத்தலைவரிடம் கடிதமெழுதி வேண்டுகோள் வைப்பது மாநில அரசுக்கிருக்கும் அதிகாரத்தைத் தாரைவார்ப்பதற்கு ஒப்பாகும். 

161வது சட்டப்பிரிவு எனும் பொன்னான வாய்ப்பிருக்கும்போது எதற்காகக் குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதும் வெற்று நடவடிக்கை? விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டுமென உளமாற நினைத்தால் கடந்த 09.09.2018 அதிமுக அரசின் அமைச்சரவை முடிவைப்போல மீண்டுமொருமுறை அமைச்சரவையைக் கூட்டி ஆளுநரின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, அதே 161வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி விடுதலையை வழியுறுத்தலாமே? அல்லது Tamil Nadu Suspension of Sentence Rule, 1982, சட்டத்தின் விதி 40ஐ பயன்படுத்தி, மாநில அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரமான விடுப்பு அளிக்கும் உரிமையில் எழுவருக்கும் காலவரையற்ற விடுப்பு வழங்கியிருக்கலாமே?? அவைகள்தான் ஆளுநருக்கு நெருக்கடியை தரும்" என்று தெரிவித்திருந்தார். 

  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget