மேலும் அறிய

Vengaivayal issue: குடிநீரில் மலம் கலந்த விவகாரம்; 8 பேருக்கு நாளை டி.என்.ஏ. பரிசோதனை - நீதிபதி உத்தரவு

வேங்கைவயல் விவகாரத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நாளை 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நாளை 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, நாளை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர்கள்  டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி வழங்க உள்ளனர்.  

குடிநீர் தொட்டியில் மலம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள வேங்கைவயல் பகுதிக்குட்பட்ட குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் மற்றொரு சமூகத்தினர் இதுபோன்று செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் என பலரும் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதுவரை இந்த  மனிதாபிமானமற்ற செயலை செய்தது யார்? என்பது தெரிய வராத நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை:

சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் வழக்கின் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. பால்பாண்டி இந்த வழக்கு நடைபெற்று வரும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் டி.என்.ஏ. பரிசோதனை எடுக்க அனுமதி கோரி கடிதம் வழங்கியிருந்தார். இதையடுத்து, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதையடுத்து, கடந்த 1-ந் தேதி தேதி இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது, அவர்கள் தாங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏன்? என்று தனித்தனியே விளக்கம் அளித்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று வந்தது. இதில், டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரும் தங்களை விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டி.என்.ஏ. பரிசோதனை:

மேலும், நாளையே 8 பேரும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற இந்த வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல், இறையூர் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. தரப்பினர் அறிவியல்பூர்வமான ஆதாரத்திற்காக முதற்கட்டமாக 11 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், டி.என்.ஏ. பரிசோதனைக்கு அறிவுறுத்தப்பட்டவர்களில் 8 பேர் பாதிக்கப்பட்ட வேங்கைவயல் மக்கள் என்பதால், தங்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சிப்பதாக அவர்கள் அச்சம்கொள்வதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பரிசோதனை:

சி.பி.சி.ஐ.டி. தரப்பினர் சுமார் 110 பேருக்கு மேல் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினர். ஆனால், அந்த 8 பேர் தங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்று வாதமிட்டனர். அதேசமயம், நீதிபதி உத்தரவிட்டால் டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஒப்புதல் அளிப்பதாக கூறியிருந்தனர்.

இந்த நிலையிலே, அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு நாளை காலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget