மேலும் அறிய

TN CM MK Stalin: மாவட்ட ஆட்சியர்களுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் முக்கிய உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் ஸ்டாலின்

பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுக்க பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் மனநிலையை இயற்கைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்றும் நாளையும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. காலை 12 மணிக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “ வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தமிழ்நாடு அரசின் இரு முக்கிய கொள்கையாகும். மீண்டும் மஞ்சப்பை என்பது எனது மனதிற்கு நெருக்கமான திட்டம். இது தமிழ்நாட்டின் பன்பாட்டில் வேரூன்றி இருப்பதால் முழுமையான மக்கள் திட்டமாக மாற்ற வேண்டியது உங்கள் கடமை. பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுக்க பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் மனநிலையை இயற்கைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும். இதனால் நமது மாநிலம் பசுமை சார்ந்த எதிர்க்காலத்தை நோக்கி வளர முடியும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வன அலுவலர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுப்பதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்கான விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அலுவலர்களோடு உறுதி செய்வதோடு அவர்களின் செயல்பாடுகளில் பள்ளி, சுய உதவிக் குழு உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் அல்லாத பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து கடல்லோர மாவட்ட ஆட்சியர்களையும், கடலோர மாவட்ட வன அலுவலர்களையும் கடல் அரிப்பை தடுக்கவும் கரையோர பகுதிகளின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதி செய்ய வழிமுறைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய நமது முயற்சிகள் அனைத்தும் மக்களை ஈடுபடுத்தி மேற்கொள்ளும் போது மட்டுமே நமது செயல்கள் முழு பயனை அளிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் வன விலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் எப்போதும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். மனித வனவிலங்கு முறன்பாடுகள் உடனடியாக கையாளப்படுவதையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை கால தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

காலநிலை மாற்ற உத்திகள் உள்ளூர் மட்டத்தில் செயல்படுத்தப்பட்டு அதனால் உள்ளூர் மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சதுப்புநில தோட்டம், கடற்புறகள், பவளப்பாறைகள் வளமையோடு மீட்டெடுப்பதை கவணம் செலுத்த வேண்டும். பசுமை தமிழ்நாடு இயக்கம் சங்க காலத்தை சேர்ந்த 18 வகை மரங்களை நட்டுள்ளது. 14 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை அரசு நட்டுள்ளது. அந்த மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர மாவட்ட ஆட்சியர்களும் வன அலுவலர்களும் சிறப்பு முயற்சி மேற்கொள்ள வேண்டும். நமது மண்ணின் வளத்தை மீட்டெடுப்பத்தில் பசுமை தமிழகம் திட்டம் கவணம் செலுத்தி வருகிறது. இந்த திட்டம் கிராமபுற மற்றும் நகர்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. வன உரிமை சட்டம் தகுதியுடைய பழங்குடியின மக்களுக்கும் தகுதி வாய்ந்த மலைவாழ் மக்களுக்கும் அனுபவ உரிமை சான்று வழங்கவும் பொதுப் பயணுக்கான அனுபவ உரிமை சான்று வழங்கவும் வழிவகை செய்கிறது. இதுவரை 11,245 தனியார் அனுபவ உரிமை சான்றுகளும் 650 பொது பயன் உரிமை சான்றும் வழங்கப்பட்டுள்ளது. பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget