![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ATM Machine Damaged: ATM-இல் கொள்ளை முயற்சியா? சேதமடைந்த இயந்திரம்? பரபரப்பால் விரைந்த காவல்துறையினர்..
ATM- ல் பணம் எடுக்க வந்தவர் மெஷினை சேதப்படுத்தியதாக தகவல் கிடைத்த நிலையில், காவல் துறையினர் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
![ATM Machine Damaged: ATM-இல் கொள்ளை முயற்சியா? சேதமடைந்த இயந்திரம்? பரபரப்பால் விரைந்த காவல்துறையினர்.. person who had come to withdraw money from the ATM damaged the machine, the police department informed the bank management. ATM Machine Damaged: ATM-இல் கொள்ளை முயற்சியா? சேதமடைந்த இயந்திரம்? பரபரப்பால் விரைந்த காவல்துறையினர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/01/c8f70dc292dbf7be75fdf31f86be99ce1685603449476589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ATM- ல் பணம் எடுக்க வந்தவர் மெஷினை சேதப்படுத்தியதாக தகவல் கிடைத்த நிலையில், காவல் துறையினர் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
ஜாம்பஜார் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட No.244, பாரதிசாலையில் தனியார் வங்கி ATM உள்ளது அதில் பணம் எடுப்பதற்காக, இன்று 31.05.2023 ம் தேதி 19.30 மணியளவில் வந்த வாடிக்கையாளர் ATM கார்டை செலுத்தி பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வராததால் ATM கார்டை எடுக்க முயற்சி செய்தபோது கார்டும் வராததால், கோபம் அடைந்த வாடிக்கையாளர் ATM இயந்திரத்தின் மானிட்டரை உடைத்துவிட்டு சென்றதாக, பொதுமக்கள் 21.00 மணிக்கு ஜாம்பஜார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ATM மானிட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து வங்கி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின் ATM கதவை மூடி சட்டரையும் மூடி D4 ஜாம்பஜார் Gypsy வாகன பொறுப்பாளர் HC 25598 திரு.பார்த்தசாரதி அவர்கள் ATM முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக வங்கிகள் சார்பாக மக்கள் எளிதாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் ஆங்காங்கே ஏடிஎம் சென்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா,அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே தினம்தோறும் ஏடிஎம் கொள்ளை, திருட முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி லக்னோ - சுல்தான்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சத்தைத் திருடியதாக 4 இளைஞர்களை அப்பகுதிக்குட்பட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களுக்கு தலைவன் ஒருவன் இருக்கிறது தெரிய வந்ததும் யார் அந்த நபர் என்பதை அறிந்து கொள்வதில் போலீசாருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
“ஏடிஎம் பாபா”
பீகாரின் சப்பராவைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்பவர் தன்னை அறிந்த வட்டாரங்களில் “ஏடிஎம் பாபா” என அன்போடு அழைக்கப்படுபவர். இவர் வேலை இல்லாத இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து 15 நிமிடங்களில் ஏடிஎம் சென்டர்களில் திருட சொல்லி கொடுத்து வந்துள்ளார். 3 மாத பயிற்சியில் எப்படி எடிஎம் மையத்தை அணுக வேண்டும், அடையாளங்களை மறைக்க வேண்டும், ஏடிஎம் மிஷினை உடைத்து 15 நிமிடங்களில் பணத்தை எடுக்க வேண்டும் என்பது கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
3 மாத பயிற்சிக்குப் பிறகு 15 நாட்கள் நேரடி ட்ரெயினிங் நடத்தப்படுகிறது. இதில் 15 நிமிடங்களுக்குள் வேலையை முடிக்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டு வந்துள்ளது. ஏடிஎம் பாபா நாடு முழுவதும் இருந்து வேலை இல்லாத இளைஞர்களை இந்த கொள்ளை சம்பவத்தில் பயிற்சி கொடுத்து ஈடுபடுத்தியது தெரிய வந்தது. நாடு முழுவதும் இந்த கும்பலால் கடந்த ஒரு வருடத்தில் இதுபோன்ற 30க்கும் மேற்பட்ட ஏடிஎம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)