மேலும் அறிய

சிறைக்கு அழைத்து வரப்பட்ட பேரறிவாளன்...! பரோலை நீட்டித்த தமிழக அரசு...!

பேரறிவாளன் பரோல் முடிந்து சிறைக்கு மீண்டும் அழைத்துவரப்பட்ட நிலையில், அவரது பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஆட்சியில் அதற்கான சட்டமசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் அந்த சட்டமசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார். இதனால் அவர்களின் விடுதலை தாமதம் ஆனது. இந்த நிலையில், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.


சிறைக்கு அழைத்து வரப்பட்ட பேரறிவாளன்...! பரோலை நீட்டித்த தமிழக அரசு...!

இந்த நிலையில், சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவின்பேரில் 30 நாட்கள் பரோல் கடந்த மாதம் 28-ந் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து, சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேலூர், வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு அவர் அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில், அவரது பரோல் காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவரை போலீசார் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்து வருவதற்காக அவரது வீட்டில் இருந்து வாணியம்பாடிக்கு அழைத்து வந்திருந்தனர். அப்போது, பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சிறைக்கு அழைத்துவரச் சென்ற போலீசார், பின்னர் பேரறிவாளனை மீண்டும் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.


சிறைக்கு அழைத்து வரப்பட்ட பேரறிவாளன்...! பரோலை நீட்டித்த தமிழக அரசு...!

1991-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 26 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ந் தேதி முதல்முறையாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பரோல் வழங்கப்பட்டது. உடல்நலம் குன்றிய தனது தந்தை குயில்தாசனை காணச்சென்ற பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று சிகிச்சைக்காக கூடுதலாக 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 2019-ஆம் ஆண்டு அவரது சகோதரியின் மகள் திருமணத்திற்காக நவம்பர் 12-ஆம் தேதி முதல் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. பின்னர், பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலனை கருத்தில் கொண்டு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, மூன்றாவது முறையாக கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி பேரறிவாளனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக 30 நாட்களும், பின்னர் மேல் சிகிச்சைக்காக 14 நாட்களும் என டிசம்பர் 7-ஆம் தேதி வரை மூன்றாவது முறையாக பரோல் வழங்கப்பட்டது. தற்போது நான்காவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு வழங்கியுள்ளது. இந்த பரோல் தற்போது மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget