மேலும் அறிய

கரூர் | புதிதாக 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் சேர்க்கையை சாதித்துள்ள அரசுப்பள்ளி..!

கரூர் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே கிருஷ்ணராயபுரம் ஜெகதாபி மேல்நிலைப்பள்ளியில் புதிதாக 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு சேர்க்கைக்கு குவிந்துள்ளனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருவதையும், பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களிடம் படித்து எதிர்காலத்தில் என்ன பணிக்கு செல்ல விருப்புகிறீர்கள் என்று  கேட்டபோது,மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அலுவலர், மருத்துவர் என ஒவ்வொருவரும் தன் மனதில் உள்ள கனவுகளை வெளிப்படுத்தினர்.  அனைவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு படிக்கும் வகுப்பிற்கான புத்தகங்களை வழங்கினார். 


கரூர் | புதிதாக 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் சேர்க்கையை சாதித்துள்ள அரசுப்பள்ளி..!

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, ”கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பள்ளிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கையினை தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளியணை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைப்பணி தொடர்பாக நேரில் ஆய்வு செய்யப்பட்டது. தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான வகுப்புகளுக்கு மாணவ-மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 666 தொடக்கப்பள்ளிகளும், 183 உயர்நிலைப்பள்ளிகளும், 93 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 1,061 பள்ளிகள் உள்ளன.

இதில் அரசுப்பள்ளிகளில் 79,753 மாணவ-மாணவிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 15,901 மாணவ-மாணவிகளும், தனியார் பள்ளிகளில் 73,793 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 1,69,447 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இனிவரும் காலங்களில் அரசுப்பள்ளகளில் அதிக மாணவ-மாணவிகள் சேர்க்கையினை அதிகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்படும். பள்ளிகளில் ஏதேனும் அடிப்படை வசதிக்குறைபாடுகள் இருந்தால் அவை உடனுக்குடன் சரிசெய்யப்படும். 


கரூர் | புதிதாக 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் சேர்க்கையை சாதித்துள்ள அரசுப்பள்ளி..!
 
இன்றைய ஆய்வின் போது, 6ஆம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் நான் உரையாடியபோது, ஏன் முகக்கவசம் அணிந்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு மிக அருமையாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து பதில் உரைத்தார்கள். அந்த அளவிற்கு தமிழக அரசின் நடவடிக்கையால், 6ஆம் வகுப்பு மாணவருக்கும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும்போதும், அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளின் நலனையும், ஆசிரியர்களின் நலனையும் காக்கும் வகையில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படும். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கும்” என தெரிவித்தார்.

பின்னர் அப்பள்ளியில் பயிலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உலர் உணவுகளின் அளவுகள் சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வுசெய்தார். இந்நிகழ்வின்போது, முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, வெள்ளியணை மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் முத்துச்சாமி  உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். 


கரூர் | புதிதாக 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் சேர்க்கையை சாதித்துள்ள அரசுப்பள்ளி..! 

கரூர் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் கிருஷ்ணராயபுரம் ஜெகதாபி மேல்நிலைப்பள்ளியில் புதிதாக 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு சேர்க்கை நடைபெற்றுள்ளது. ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த கல்வியாண்டில் சேர்க்கை நடைபெற்று உள்ளதாகவும், அவர்களுக்கு ஆளுக்கு ஒரு மரக்கன்றுகளை வழங்கி பள்ளியின் தலைமையாசிரியர் மகிழ்வித்தார். அதேபோல் மாயனூர் அரசு பள்ளியிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மரக்கன்றுகளை பள்ளியின் தலைமையாசிரியர் வழங்கினார். அதேபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த கல்வியாண்டில் சேர்க்கையின் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் அரசு பள்ளிகளை தேடி பெற்றோர்களும் மாணவர்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

தமிழக அரசு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் நிலையில் வேலைவாய்ப்பிலும் அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இன்னும் கூடுதலாக வாய்ப்புகள் வழங்கினால் பின்வரும் காலங்களில் அரசு பள்ளியில் இருந்து பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சிறப்பான அரசியல் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ,புகழ்பெற்ற மருத்துவர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பணிகளுக்கு அதிக அளவில் வர வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget