மேலும் அறிய

கை அகற்றப்பட்ட குழந்தை மரணம்.. மருத்துவர்கள் மீது பெற்றோர்கள் சரமாரி குற்றச்சாட்டு

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை இன்று உயிரிழந்த நிலையில், அக்குழந்தையின் பெற்றோர் மருத்துவர்கள் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர். 

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை இன்று உயிரிழந்த நிலையில், அக்குழந்தையின் பெற்றோர் மருத்துவர்கள் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர். 

குழந்தை மரணம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தஸ்தகீர் - தம்பதியினரின் ஒன்றரை வயது மகன் முஹம்மது மகிருக்கு கடந்த ஜூன் மாதம் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒரு கை அகற்றப்பட்டது. மருத்துவமனையின் தவறான சிகிச்சை தான் கை எடுக்க காரணம் என குழந்தையின் பெற்றோர் சரமாரியாக புகாரளித்தனர். இந்த பிரச்சினை மிகப்பெரிய அளவில் பிரச்சினை கிளம்பியது. 

எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்க, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்தார். மேலும் விசாரணைக்குழு அமைத்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில்  சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மகிர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். 

பெற்றோர் சரமாரி குற்றச்சாட்டு 

இந்நிலையில் குழந்தை மகிரின் பெற்றோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தாய் அஜீசா, “மருத்துவர்களில் அலட்சியம், செவிலியர்களின் கவனக்குறைவால் என் மகனின் கை அழுகிப்போன நிலைமைக்கு போய் அகற்றப்பட்டுச்சு. அதுக்கு நீதி கேட்டு சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அதுக்கான தீர்வு இன்னைக்கு வர கிடைக்கல. இதற்கிடையே 3 நாட்களுக்கு முன்னால் எல்லா டாக்டர்களும் சேர்ந்து டீன் முன்னாடி எனக்கு கவுன்சிலிங் கொடுத்தாங்க.

கடந்த ஜூலை 29 ஆம் தேதி கடைசியாக குழந்தையின் தலையில் இருக்கும் நீர் ஆய்வு செய்தார்கள். அதில் தொற்று இருப்பது தெரிய வந்தது. பிரச்சினையை அதில் தான் ஆரம்பித்தது. மருத்துவர் குழந்தைக்கு மற்றுமொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் தொற்றுடன் செய்தால் உயிருக்கு ஆபத்து என சொன்னார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். மறுநாள் வயிறு முதல் கால் வரை முதலிலும், பின்னர் நெஞ்சு வரையிலும் வீங்க தொடங்கியது. 

நான் மருத்துவரை அழைத்து விவரம் சொன்னேன். அதற்கு அவர்கள் தலையில் வைக்கப்பட்ட குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்படி நடப்பதாக தெரிவித்தார்கள். மேலும் குழந்தை வாழ்வின் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகவும் கூறினர். மேலும் மருத்துவர் ஒருவர், குழந்தைக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி என்பது இல்லை, மருந்து மட்டும் தான் வேலை செய்வதாக சொன்னார். நான் என்ன இது என்று கேட்டேன்.

அதற்கு நிறைய நரம்புகள் செயலிழந்து விட்டதாகவும், அதனால் கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். எனக்கும் இன்னும் கை அகற்றப்பட்டதற்கான சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை. மருத்துவ ரிசல்ட் எனக்கு தரலை. உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியே இல்லை என சொல்லிவிட்டு எப்படி மறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொன்னார்கள்?. யாருமே சரியான விளக்கம் கொடுக்க மாட்டுகிறார்கள். ஏனென்றால்  அவர்கள் தப்பு செய்தவர்கள். குழந்தை இறந்து விடுவான் என தெரிந்தும் அறுவை சிகிச்சை செய்ய ஏன் முன்வந்தார்கள். 

நான் ஏதாவது கேட்டால், யாரோ சொல்லி நான் பேசியதாக சொல்கிறார்கள். அப்போது அமைச்சர் சொன்னதற்கும், டீன் சொன்னதற்கும் என்ன வித்தியாசம்?.நீங்கள் செய்த தப்புக்கு என் குழந்தையின் உயிர் போயிடுச்சி. என் குழந்தையின் உடல்நிலை பற்றி கேட்டால் குறைபிரசவம் என காரணம் சொல்கிறார்கள். என் குழந்தைக்கு உரிய நீதி கிடைக்கவில்லை” என குற்றம் சாட்டினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CV Shanmugam Slams EC: அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Slams EC: அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ADMK Case Verdict: இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
Gold Rate Reduced: ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
Embed widget