மேலும் அறிய

Chennai Corona | தீவிர அறிகுறி நோயாளிகளுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் அனுமதி.. சென்னை ஆணையர்

தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத பட்சத்திலோ அல்லது லேசான அறிகுறிகள் இருக்கும் பட்சத்திலோ  மருத்துவமனையை நேரடியாக நாடுவதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறிகள் இல்லாத நோயாளிகள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டார். பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் வல்லுநர்களின் கருத்துப்படி மே மாதம் இடைப்பட்ட நாட்களில் தொற்று உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதார்த்தங்களை புரிந்து கொண்டு பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். 

ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்படும் நிலையில்  தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத பட்சத்திலோ அல்லது லேசான அறிகுறிகள் இருக்கும் பட்சத்திலோ  மருத்துவமனையை நேரடியாக நாடுவதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். தீவிர அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவர். தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் சென்னை முழுவதிலுமுள்ள 12 கொரோனா கண்காணிப்பு மையங்களை தொடர்பு கொள்ளவேண்டும். பின் அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 

 

Chennai Corona | தீவிர அறிகுறி நோயாளிகளுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் அனுமதி.. சென்னை ஆணையர்

அறிகுறிகள் இல்லாத நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது மருத்துவர்களுக்கு வேலைப்பளு ஏற்படுவதனால் தீவிர அறிகுறிகள் கொண்ட நோயாளிகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், நோயாளிகளின் இறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தினசரி வரும் 3700 தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1200 பேருக்கு மட்டுமே தீவிர அறிகுறிகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும். இதனை பொதுமக்கள் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் பெரும்பாலான இறப்புகளை தவிர்க்க முடியும். தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் பொதுமக்கள் மாநகராட்சி வாகனங்களை நாட வேண்டும் என்ற அவசியமில்லை தங்களது சொந்த வாகனங்களிலேயே பாதுகாப்புடன் கண்காணிப்பு மையங்களுக்கு வரலாம். 

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குறைந்தது 50 சதவிகித படுக்கை வசதிகள் இருக்கவேண்டும் என்றும் தீவிர அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற தலைமை செயலாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Chennai Corona | தீவிர அறிகுறி நோயாளிகளுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் அனுமதி.. சென்னை ஆணையர்

சென்னையில் தற்போது நாளொன்றுக்கு 20,000 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை 25,000 வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை மூலம் "செயலி" ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கை வசதிகள் உள்ளன என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். இது இன்று அல்லது நாளைக்குள் அறிமுகப்படுத்தப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக கடைப்பிடித்தால் 4 நாட்களுக்குள் தொற்றின் விகிதாச்சாரத்தை பாதி அளவிற்கு குறைக்க மூடியும். முடிந்த அளவிற்கு திருமணம், பண்டிகைகள் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளிப் போடவேண்டும்".  இவ்வாறு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தனது பேட்டியில் தெரிவித்தார்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
TN POLITICS 2025 : பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
2025 பிளாஷ் பேக்: பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Embed widget