மேலும் அறிய

Minister Senthil Balaji: தொடங்கியது விசாரணை - அடுக்கடுக்கான வாதங்களை முன்வைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின் போது சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என என்.ஆர் இளங்கோ உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர் இளங்கோ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாதிட்டு வருகிறார். இரு தரப்பினருக்கும் கார சார விவாதம் நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி தரப்பு வாதம்:

  • செந்தில் பாலாஜி கைது தொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டப்படி நோட்டீஸ் வழங்கவில்லை.
  • ஏற்கனவே இதே நீதிமன்றத்தில் தேசிய முகமை தொடர்ந்த வழக்கில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
  • செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம். அட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி என்.ஆர்.இளங்கோ வாதத்தை முன் வைத்தார்.
  • அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்காது. செந்தில் பாலாஜி கைதின் போது சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
  • செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என நக்கீரன் கோபால் உள்ளிட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்புகளை சுட்டி காட்டி வாதத்தை முன்வைத்தார்.
  • இருப்பினும் வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் - நீதிபதிகள்.
  • கைது குறித்து தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது என்பது அடிப்படை உரிமை அதை அரசியல் சாசனத்தின் 15 ஏ பிரிவில் அம்பேத்கர் சேர்த்திருக்கிறார். நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான்.
  • உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது.
  • சோதனையின் போது இரவு 11 மணி முதல் ஒரு மணி வரை செந்தில் பாலாஜிக்கு என்ன நடந்தது என  யாருக்கும் தெரியாது.
  • நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த எங்கள் தரப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 13ம் தேதி இரவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது.
  • குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவின் கீழ் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். இந்த பிரிவு தங்களுக்கு பொருந்தாது என அமலாக்கப் பிரிவு தரப்பில் கூறுகிறார்கள்.
  • குற்றவியல் நடைமுறை சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு எந்த காரணிகளும் இல்லை

என என்.ஆர். இளங்கோ அவர் தரப்பு வாதத்தை முன் வைத்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள நாட்களை காவலில் உள்ள நாட்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது என தனியாக மனு தாக்கல் செய்துள்ளோம் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Fraud Fact Check: தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
Breaking News LIVE: விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் பதவியேற்பு
Breaking News LIVE: விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் பதவியேற்பு
Parliament Session: 18ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்.. ஜூன் 24ஆம் தேதி கூடுகிறது!
24ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டம்.. அசுர பலத்துடன் தயாராகும் எதிர்க்கட்சிகள்.. சமாளிக்குமா பாஜக அரசு?
MP Salary Benefits: எம்.பி., சம்பளத்தை விடுங்க, சலுகைய கவனிங்க..! ரயில் - விமானம், தண்ணீர் - மின்சாரம் எல்லாமே ஃப்ரீ..!
எம்.பி., சம்பளத்தை விடுங்க, சலுகைய கவனிங்க..! ரயில் - விமானம், தண்ணீர் - மின்சாரம் ஃப்ரீ
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin Plan : தள்ளிப்போன உதயநிதியின் பட்டாபிஷேகம்! ஸ்டாலின் பக்கா பிளான்Selvaperunthagai | ’’திமுக நிழலில் காங்கிரஸ்?’’என்ன பேசினார் செ.பெருந்தகை?BJP new president | BJP-க்கு இளம் தலைவர்? மோடி ட்விஸ்ட்!கதிகலங்கும் சீனியர்கள்!Senji Masthan Vs Ponmudi | செஞ்சி மஸ்தானுக்கு கல்தா! பொன்முடி HAPPY அண்ணாச்சி! அலறவிட்ட ஸ்டாலின்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Fraud Fact Check: தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
Breaking News LIVE: விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் பதவியேற்பு
Breaking News LIVE: விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் பதவியேற்பு
Parliament Session: 18ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்.. ஜூன் 24ஆம் தேதி கூடுகிறது!
24ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டம்.. அசுர பலத்துடன் தயாராகும் எதிர்க்கட்சிகள்.. சமாளிக்குமா பாஜக அரசு?
MP Salary Benefits: எம்.பி., சம்பளத்தை விடுங்க, சலுகைய கவனிங்க..! ரயில் - விமானம், தண்ணீர் - மின்சாரம் எல்லாமே ஃப்ரீ..!
எம்.பி., சம்பளத்தை விடுங்க, சலுகைய கவனிங்க..! ரயில் - விமானம், தண்ணீர் - மின்சாரம் ஃப்ரீ
Stock Market Today: ஐ.டி. பங்குகள் உயர்வு;புதிய உச்சம் தொட்ட நிஃப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!
ஐ.டி. பங்குகள் உயர்வு;புதிய உச்சம் தொட்ட நிஃப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!
BJP TamilNadu : “இஷ்டத்திற்கு பேசக் கூடாது – தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக மேலிடம் போட்ட உத்தரவு இதுதான்..!
BJP TamilNadu : “இஷ்டத்திற்கு பேசக் கூடாது – தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக மேலிடம் போட்ட உத்தரவு இதுதான்..!
Chandrababu Naidu: ஆந்திர முதலமைச்சராக இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு - பவன் கல்யாண் துணை முதலமைச்சர்?
ஆந்திர முதலமைச்சராக இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு - பவன் கல்யாண் துணை முதலமைச்சர்?
Odisha: ஒடிசாவில் இன்று பதவியேற்பு, ஆனால் முதலமைச்சருக்கு இல்லமே இல்லை - நவீன் பட்நாயக்கின் WFH  சிக்கல்
Odisha: ஒடிசாவில் இன்று பதவியேற்பு, ஆனால் முதலமைச்சருக்கு இல்லமே இல்லை - நவீன் பட்நாயக்கின் WFH சிக்கல்
Embed widget