மேலும் அறிய

‘எல்லோரும் என்னை போல், 100 வயது வாழுங்கள்’ ...பூர்ணாபிஷேக சுபதினவிழா..காமாட்சி பாட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பூர்ணாபிஷேக சுபதின விழாவில், மூத்த குடி, மூதாட்டி நான்கு தலைமுறையினருக்கு, ஆசி வழங்கி, அன்பு கட்டளை. நேதாஜியின் இந்திய தேசிய படையில் பணியாற்றிய வீரரின் மனைவிக்கு, பிரதமர் வாழ்த்து செய்தி அனுப்பி புகழாரம்.

 
கொள்ளு பேரன்களை கொஞ்சி மகிழ வயதான தாத்தா பாட்டி இல்லையே என ஏங்குவேற்கு மத்தியில், அத்தி பூத்தார் போல் சில குடும்பங்களில் இன்றளவும் 100 வயது கடந்த வயதானவர்கள் வாழ்ந்து தான் வருகின்றனர். அதற்கு காரணம் அந்த காலத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட சத்தான உணவு தானியங்கள் மற்றும் உடல் உழைப்பு என்றால் அது மிகையாகாது. தோல்கள் சுருங்கி, தேகம் மெலிந்தாலும் திடகாத்திரமாய் நடந்து வரும் இந்த மூத்த குடி மூதாட்டியின் பெயர் காமாட்சி.  
 
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கணபதியின் மனைவி காமாட்சி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவம் ( Indian National Army ) கொரில்லா படையில் பணியாற்றியவர் தான் கணபதி.
 
தாமரை பட்டயம் பெற்ற கணபதியின் மனைவி காமாட்சிக்கு 100 வயது பூர்த்தி அடைந்ததையொட்டி அவரது மகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் நான்கு தலைமுறை குடும்பத்தினர்கள் திருமலைராயன் பட்டினத்தில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில் பூர்ணாபிஷேக சாந்தி விழா கொண்டாடினர். விழாவிற்காக காமாட்சி அம்மாள் கையைப் பிடித்து அவரது மகன்களும் பேரப்பிள்ளைகளும் மண்டபத்தின் மேடைக்கு அழைத்து வந்தனர். மேடையில் வந்து அமர்ந்த மூதாட்டி, உற்றார், உறவினர்களையும், பேரப்பிள்ளைகள் மற்றும் ஊர் மக்களை பார்த்ததும், சந்தோசத்தில் திக்கு முக்காடி நெகிழ்ந்து போனார்.

‘எல்லோரும் என்னை போல், 100 வயது வாழுங்கள்’ ...பூர்ணாபிஷேக சுபதினவிழா..காமாட்சி பாட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பூர்ணாபிஷேக சுபதின விழாவில், நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், மூதாட்டியின் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் கொள்ளு பேரன்கள் என நான்கு தலைமுறை குடும்பத்தினர் காமாட்சி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்று, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். அதனை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற வாழ்மங்கலம் கிராமம், நாகப்பட்டினம், டி ஆர் பட்டினம், காரைக்காலைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அனைவருக்கும் நூற்றாண்டுகளை கடந்து வாழ்ந்து வரும் இந்திய தேசியப்படை வீரரின் மனைவியான காமாட்சி பாட்டி நெற்றியில் விபூதி பூசி ஆசீர்வதித்தார். 
 
இதனிடையே நூறு வயது நிறைந்த தாமரைப் பட்டயம் பெற்ற இந்திய தேசியப்படை வீரரின் மனைவியான வாழ்மங்கலம் காமாட்சி அம்மாவுக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோதி பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பி புகழாரம் சூட்டியுள்ளார். 

‘எல்லோரும் என்னை போல், 100 வயது வாழுங்கள்’ ...பூர்ணாபிஷேக சுபதினவிழா..காமாட்சி பாட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 
பாட்டியுடன் வாழ்ந்த காலத்தில் தனது தாத்தாவின் ராணுவ போர் பயண அர்ப்பணிப்பான அரிய விஷயங்களை அறிந்து கொண்டதாக கூறும்  மூதாட்டியின் பேரப்பிள்ளைகள், கல்யாண காட்சிகளைத் தாண்டி தனது பாட்டியை இத்தனை வயது வரை பாதுகாத்து அவருக்கு பூர்ணாபிஷேக சுப தின விழா எடுத்தது தங்களுக்கு பெரும் மன நிறைவை தந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
 
நூற்றாண்டை கடந்த பாட்டிக்கு  பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி மகிழ்ந்ததாக தெரிவித்த பேரப்பிள்ளைகள், தங்களுக்கு பாட்டி கையாள் ஆசிர்வாதம் கிடைத்த தருணம் சந்தோஷத்தை ஏற்படுத்திச்சி என்றும், இந்த ஆத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என மழலை பொங்க கூறினர்.

‘எல்லோரும் என்னை போல், 100 வயது வாழுங்கள்’ ...பூர்ணாபிஷேக சுபதினவிழா..காமாட்சி பாட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 
பூர்ணாபிஷேக சுபதினத்தில் உற்றார் உறவினர்கள் குடும்பத்தினர் பேரப்பிள்ளைகளை ஒரு சேர பார்ப்பது என்பது பூத்துக் குலுங்கும் நந்தவன சோலை போல் உள்ளது என்றும் எல்லோரும் நாட்டுக்காக வாழ்ந்து நற்பெயரை எடுப்பதுடன், என்னைப்போல் உற்றார் உறவினர்களுடன் மன மகிழ்வுடன் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என  தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கையுடன் காமாட்சி மூதாட்டி அன்பு கட்டளையிட்டார்.
 
தான் பிறந்த கிராமத்தின் பெயர் போல் மகன்கள், மருமகள்கள் மற்றும் நான்கு தலைமுறை பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாக 100 வயதை கடந்து வாழ்ந்துள்ளார் வாழ்மங்கலம் காமாட்சி என்றால் அது மிகையாகாது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget