மேலும் அறிய

கரூர் : எலக்ட்ரிக்கல் கடைக்கு பூட்டு போட்டு எச்சரித்த நகராட்சி அதிகாரிகள்!

ஊரடங்கு உத்தரவை மீறி மறைமுகமாக விற்பனையில் ஈடுபட்டு வந்த வடமாநில வியாபாரிகள் கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

கரூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் எலக்ட்ரிகல் - எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் ஈடுபட்டு வந்த வடமாநில வியாபாரிகள் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டும், பகுதி முழுவதும் தடுப்புகள் வைத்து அடைத்தும் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.


கரூர் : எலக்ட்ரிக்கல் கடைக்கு பூட்டு போட்டு எச்சரித்த நகராட்சி அதிகாரிகள்!

உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் தமிழக அரசு கடந்த மாதம் இறுதியில் ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து அதன்படி கொரோனா தொற்றை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பற்றி படிப்படியாக குறைந்து வருகிறது. அதை தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி தமிழக முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.


கரூர் : எலக்ட்ரிக்கல் கடைக்கு பூட்டு போட்டு எச்சரித்த நகராட்சி அதிகாரிகள்!

அதைத் தொடர்ந்து ஜூன் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் 11 மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டத்தில் சில அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி செய்திக்குறிப்பில் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து 11 மாவட்டத்தில் கரூர் மாவட்டமும் அடங்கும். மேலும், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


கரூர் : எலக்ட்ரிக்கல் கடைக்கு பூட்டு போட்டு எச்சரித்த நகராட்சி அதிகாரிகள்!

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனைக்கு இணங்க தீவிர முயற்சியால் ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் பொது மக்களுக்கு நாள்தோறும் மூன்று வேளை உணவும் வழங்கி வருகின்றனர். ஊரடங்கு தளர்வு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கரூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முருகநாதபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில வியாபாரிகள் எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ் கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி மறைமுகமாக விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், அவ்வாறு விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் கடைகளுக்கு பூட்டு போட்டனர்.

மேலும், தொடர்ந்து அப்பகுதியில் நடைபெறும் விற்பனையை தடுக்கும் விதமாக அப்பகுதி வழியாக பொதுமக்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் விதமாக தடுப்புகள் வைத்து அடைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட கடைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதனை கவனத்தில் கொள்ளாமல் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட கடைகளை திறந்து தங்களது வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். வியாபார நோக்கில் செயல்பட்டு வரும் கடைகளை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM விஜய்
சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
Embed widget