மேலும் அறிய

சோனியா காந்தி குறித்து வலைத்தளங்களில் அவதூறு - நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த மனு நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த காந்தி சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் தவறான அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுகிறது. அதனால் தவறாக பரப்பப்படும் இந்த தகவல்களை சமூக வலைத்தளத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பதிவு தபால் மூலம் புகார் செய்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 

சோனியா காந்தி குறித்து வலைத்தளங்களில் அவதூறு - நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
 
மேலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மீது அவதூறு பரப்பும் விதமாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. எனவே உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறு தகவல்களை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் மற்றும் அவதூறான தகவல்களை பரப்பி வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனு நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
 

 
பொது இடத்தின் நுழைவு வாயிலில் எவ்வாறு குறிப்பிட்ட சமூகத்தின் பெயர் பயன்படுத்தப்படுகிறது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "அணைத்தளப்பட்டி கிராமத்தில் உள்ள சர்வே எண் 534/1,  534/2 ஆகிய பகுதிகள் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் பயன்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அவற்றில் சில பகுதியை விவசாயத்திற்கான உரம் தயாரிப்பதற்கான இடமாக பயன்படுத்தி வந்தனர். இந்த பகுதி காலியிடம் என பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள இடங்களில் அரசுப் பள்ளி, கோவில் கட்டப்பட்டும், விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்று சமூகத்தை  சேர்ந்தவர்கள், இந்த இடங்களை எங்கள் சமூகத்தினர் பயன்படுத்த தொடர்ச்சியாக இடையூறு செய்து வருகின்றனர்.
 
கோவில், பள்ளி உள்ளிட்ட இடங்களில் நுழைய அனுமதிப்பதில்லை. மாற்று சமூகத்தினரின் தரப்பில் அந்த இடத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்காக திட்டமிட்டு இதுபோல இடையூறு செய்து வருகின்றனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிவகாசியின் வருவாய் மண்டல அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எங்கள் தரப்பு நியாயத்தை கேட்காமல் சாதி பிரச்சினையை உருவாக்க முயல்வது போல் எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றார்.  இது ஏற்கத்தக்கதல்ல ஆகவே அணைத்தளப்பட்டி கிராமத்தில் மாற்று சமூகத்தினர்  சார்பில் சமுதாய கூடம் கட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. 
 
மனுதாரர் தரப்பில் அரசுப்பள்ளி மற்றும் அங்கிருக்கும் சமுதாய நலக்கூடத்தின் கேட்டில் உபயம் என மாற்று சமூகத்தினரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இதுபோல இடையூறுகளை செய்து வருகின்றனர். ஆகவே மாற்று சமூகத்தினர் சார்பில் சமுதாய நலக்கூடம் கட்ட அனுமதிக்க கூடாது" என வாதிடப்பட்டது. அதற்கான புகைப்படங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு, "பொது இடத்தின் நுழைவு வாயிலில் எவ்வாறு குறிப்பிட்ட சமூகத்தின் பெயர் பயன்படுத்தப்படுகிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, பள்ளி மற்றும் சமுதாயக்கூடத்தின்  கேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாதி பெயரை உரிய காவல்துறை பாதுகாப்புடன் உடனடியாக நீக்கவும் அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget