மேலும் அறிய

பாலியல் புகாரில் சிக்கிய நர்சிங் கல்லூரி தாளாளரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்த விவகாரம் தொடர்பாக பெண்டிரைவ் ஒன்று விசாரணைக்கக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பொள்ளாச்சி சம்பவத்தை விட கொடுமையான சம்பவங்கள் உள்ளன -  அகில இந்திய மாதர் சங்கம் தரப்பில் வாதம்

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் உள்ள நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன். இவர் மீது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் கொடுத்த புகாரில் போக்ஸோ உட்பட 14 பிரிவுகளில் மூன்று வழக்குகளை தாடிக்கொம்பு போலிஸார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கல்லூரி தாளாளர் காவல்துறையினர் கைது செய்யாமல் இருந்ததை கண்டித்து மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில்,  காவல்துறையினர் அவரை, பழனி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில், தாளாளர் ஜோதிமுருகனுக்கு கீழமை நீதிமன்றம் ஒரே வாரத்தில் ஜாமீன் வழங்கியது.எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அரசு தரப்பில் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
 
இதனை தொடர்ந்து  தமிழக அரசுத்தரப்பில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு இனிய செய்யப்பட்டது.இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி, அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின் சுகந்தி சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர், முன்பாக விசாரணைக்கு வந்தது. ஜோதிமுருகன் தரப்பில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், தனது ஜாமினை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.
 
அகில இந்திய கூட்டமைப்பின் சார்பில், " மனுதாரர் ஜாமினில் வெளியே இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. அதோடு, பெண்டிரைவ் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பொள்ளாச்சி சம்பவத்தை விட கொடுமையான சம்பவங்கள் உள்ளன. ஆகவே மனுதாரரின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.அதையடுத்து நீதிபதி, " அந்த பெண்டிரைவ்  விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.அகில இந்திய மாதர் சங்கம் சார்பில், விசாரணைக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 

 
அரசு நிலத்தை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர் அன்னபிரகாஷின் ஜாமீன் மனு தள்ளுபடி 
 
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலத்தை கடந்த அதிமுக ஆட்சியில், அதிகாரிகள் துணையோடு  அன்னபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் முறைகேடாக குவாரி நடத்தி  பல நூறு கோடி ரூபாய் மோசடி நடத்தியது தெரிய வந்தது.இது தொடர்பாக  அரசு அதிகாரிகள் பலர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் கடந்த வாரம்  அன்னபிரகாஷ் குடும்பத்தினருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.
 
இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க  அன்னப்பிரகாஷ் மகள்கள் சிவனேஸ்வரி, ஜெயா, மற்றும் ஜெயபிரகாஷ் பாண்டி, லதா, பாப்பம்மாள் உள்ளிட்ட  குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது. 
 
அரசு தரப்பில் மனுதாரர்களுக்கு  முன்ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து நீதிபதி," மனுதாரர்களை விசாரணைக்கு ஆஜராக கூறி தான் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரிடம் போலீசார் விசாரணை செய்வது என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே மனுதாரர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். மனுதாரர்களை கைது செய்ய வேண்டுமானால் குறிப்பிட்ட கீழமை நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று போலீசார் கைது செய்யலாம். எனக் கூறி பிரகாஷின் குடும்பத்தினரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget