மேலும் அறிய

மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம்

மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. பலரும் வாழ்வாதாரம் இழந்து தவித்த நிலையிலும் கூட, தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதனால், கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள பலரும் அரசுப்பள்ளிகளில் சேர்ந்தனர். ஆனால், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்வதற்கு மாற்றுச்சான்றிதழ் தேவையில்லை என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பிரின்ஸ்பாபு ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.


மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம்

விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் தனியார் சுயநிதி பள்ளிகம் முழுக்க முழுக்க மாணவர்களின் கட்டணத்தை நம்பியே செயல்படுகிறது என்றும், எந்தெந்த மாணவர்கள் பள்ளியில் படிப்பை தொடர்கின்றனர், யார், யார் வேறு பள்ளிக்கு செல்கின்றனர் என்ற விவரங்கள் தெரியாவிட்டால், பள்ளிகளின் நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படும் என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்தகாரணத்தை கொண்டும் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே கல்வித்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இக்கட்டான சூழலில் அரசின் ஒவ்வொரு முடிவிலும் தலையிட முடியாது. இருப்பினும், இருதரப்பு பாதிப்பையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. வேறு பள்ளிகளுக்கு மாறுவதற்கு மாணவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.

வேறுபள்ளிகளுக்க சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், கட்டண பிரச்சினை உள்ளிட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சட்டப்படி தீர்வு காண வேண்டும். மாற்றுச்சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது. சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி ஆணையர் இரு வாரங்களில் உரிய சுற்றறிக்கையை பிறப்பிக்க வேண்டும். மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டால், இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை எடுத்துக்கொள்ளும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

 ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், இணையதள வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இருப்பினும் பல தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget