மேலும் அறிய

Madras Highcourt : சாலையோரத்தில் இருக்கும் கல் எல்லாம் கடவுள் இல்ல.. சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

சாலையோரத்தில் இருக்கும் கல்லுக்கு துணியை போர்த்தினால் அது கடவுள் சிலையாகிவிடாது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

சாலையோரத்தில் இருக்கும் கல்லுக்கு துணியை போர்த்தினால் அது கடவுள் சிலையாகிவிடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. தனியாருக்கு சொந்தமான இடத்திற்கு உள்ளே செல்ல முடியாத வகையில் கடவுள் சிலை ஒன்றை உள்ளூர்வாசிகள் வைத்துள்ளனர். 

"சாலையோரத்தில் இருக்கும் கல் எல்லாம் கடவுள் இல்லை"

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த கல்லை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். 

அதில், "சாலையோரத்தில் கல் ஒன்றுக்கு பச்சை நிற துணியை போர்த்திவிட்டு, அது கடவுள் சிலை என்ற நிலையை அடைந்துவிட்டதாக ஒருவர் கூற முடியாது. தனியார் நிலத்தில் சிலையை வைத்துவிட்டு அதற்கு சொந்தமானவரின் உரிமைகளை அனுபவிக்க விடாமல் தடுக்க முடியாது. சமுதாயத்தில் இம்மாதிரியான மூடநம்பிக்கைகள் தொடர்ந்து நிலவுவது துரதிர்ஷ்டவசமானது. மக்கள் வளர மறுக்கின்றனர்" என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தனக்கு சொந்தமான இடத்தின் நுழைவாயில் அருகே உள்ள கல்லை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கோரி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், "பச்சைத் துணியால் போர்த்தப்பட்டிருந்த கல்,  தனியார் இடத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்ல முடியாமல் கல் இடையூறாக இருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து:

கல்லை அகற்ற அந்த இடத்திற்கு சொந்தமானவர் முயற்சித்துள்ளார். இருப்பினும், சில உள்ளூர்வாசிகள் அதை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஏனெனில், இது ஒரு கல் மட்டுமல்ல, அது ஒரு கடவுள் சிலை என்றும், அதில் தலையிடக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பிட்ட இடத்தில் இருந்து கல்லை அகற்றுவது சிவில் பிரச்னை என்றும் இந்த விவகாரத்திற்கான தீர்வை சிவில் நீதிமன்றமே வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் முன்வைத்தது.

இந்த வாதத்தை மறுத்த நீதிமன்றம், "நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை இந்த நீதிமன்றம் கவனமாக ஆய்வு செய்தது. மனுதாரருக்குச் சொந்தமான இடத்தின் எதிரே கல் நடப்பட்டிருப்பது தெரிகிறது. அந்த கல்லை பச்சை துணியால் மூடி, அதை சிலை என்று யாரோ ஒருவர் அழைக்க முயற்சி செய்கிறார்.

அந்த இடத்தில், தனது சொத்தை அனுபவிக்க விடாமல் மனுதாரரை தடுத்துள்ளனர். மனுதாரரால் கல்லை அகற்ற முடியவில்லை. இதற்காக, மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுக முடியாது" என தெரிவித்தது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
சோகம்! நெட்டிசன்கள் கேலியால் குப்பைகளை சேமிக்கும் முதியவர் தற்கொலை - எங்கே இது?
சோகம்! நெட்டிசன்கள் கேலியால் குப்பைகளை சேமிக்கும் முதியவர் தற்கொலை - எங்கே இது?
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Embed widget