TN Rain Alert: தமிழகத்தில் இன்றைய மழை அப்டேட் இவ்வளவுதான்... தெரிஞ்சிக்கோங்க!
ராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழைக்க வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழைக்க வாய்ப்பு என தெரிவித்துள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-25-03:37:43 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அம்பத்தூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/VZsbwTa38j
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 24, 2022
25.11.2022 முதல் 28.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கனித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு:
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அதிகபட்சமழைப்ப்பொழிவு:
தாமரைப்பக்கம் (திருவள்ளூர்) 10, திருத்தணி (திருவள்ளூர்), காஞ்சிபுரம் தலா 7, கரூர் (தர்மபுரி), வந்தவாசி (திருவண்ணாமலை) தலா 5, குடியாத்தம் (வேலூர்), கலவை PWD (ராணிப்பேட்டை), புதுச்சேரி, பூண்டி (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை) தலா 4, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), கலவை AWS (ராணிப்பேட்டை), திருத்தணி PTO (திருவள்ளூர்) தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்:
தெற்கு ஆந்திர நிலப்பரப்பு பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தற்பொழுது தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. இது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக இருந்து மேலும் வலு குறைந்து வருகிறது. இன்று வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் ஐந்து தினங்களில் ஓருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு மட்டும் வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















