மேலும் அறிய

பெருந்தொற்றுக் காலத்தால் வெறிச்சோடிய கொடைக்கானல் : வேதனையில் சுற்றுலா வணிகர்கள்

கொடைக்கானலில் இரண்டாம் ஆண்டு தொடர்ந்து ஊரடங்கு கொரோனா தொற்று காரணமாக   சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளதால் சுற்றுலா தொழில் புரிவோர் வேதனை, ரம்மியமாக  காட்சியளிக்கும் கொடைக்கானல் மலைப்பகுதியை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

கொடைக்கானலில் இரண்டாம் ஆண்டு தொடர்ந்து ஊரடங்கு கொரோனா தொற்று காரணமாக  சுற்றுலா பயணிகளுக்கு தடை  உள்ளதால் சுற்றுலா தொழில் புரிவோர் வேதனை, ரம்மியமாக  காட்சியளிக்கும் கொடைக்கானல் மலைப்பகுதியை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

பெருந்தொற்றுக் காலத்தால் வெறிச்சோடிய கொடைக்கானல் : வேதனையில் சுற்றுலா வணிகர்கள்

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை சீசனில் ரம்மியமான காலநிலை நிலவும். மலை முகடுகளின் இடையில் தவழ்ந்து செல்லும் மேகக்கூடங்கள் , ஆங்காங்கே ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள் என  பசுமைப்போர்த்தியது போல் காட்சியளிக்கும், மலைமுகடுகளையும், சுற்றுலாத்தலங்களையும் காண தமிழகம் முழுவதிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகளின் வருகையால்  கொடைக்கானல் மலைப்பகுதி களைகட்டும். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தமிழக அரசு கோடைவிழா, மலர்கண்காட்சி ஆகியவற்றை நடத்தும்.

பெருந்தொற்றுக் காலத்தால் வெறிச்சோடிய கொடைக்கானல் : வேதனையில் சுற்றுலா வணிகர்கள்

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, இதனால்  கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்படவில்லை. ஆண்டுதோறும் கோடை சீசனான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தான் ஓராண்டுக்கான வருவாயை ஈட்டவேண்டும் என்ற நிலையில்தான் கொடைக்கானலில் சுற்றுலாத்தொழிலை நம்பியுள்ள மக்களுக்கும் , வியாபாரிகளும் உள்ளனர் . ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்  தங்கள் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்துள்ளனர் . கொடைக்கானல் மக்களுக்கு இது மூன்று மாத இழப்பு அல்ல, ஓராண்டு இழப்பாகவே பார்க்கப்பட்டது.

பெருந்தொற்றுக் காலத்தால் வெறிச்சோடிய கொடைக்கானல் : வேதனையில் சுற்றுலா வணிகர்கள்

ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மே மாத இறுதியில் நடைபெறும் மலர்கண்காட்சி, கோடைவிழா, வாத்துப்பிடிக்கும் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்றவை நடைபெறவில்லை. சென்ற சில மாதங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டநிலையில் சுற்றுலாபயணிகள் வருகை கனிசமாக இருந்தது. வாழ்வாதாரத்தில் மீண்டுவிட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்து கொடைக்கானல் மக்களுக்கு மீண்டும் தற்போது விதிக்கப்பட்ட ஊரடங்கு, சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடை என்ற அரசின் அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர். இந்த ஆண்டாவது கோடைவிழா நடைபெறும், இதில் மலர்கண்காட்சி உள்ளிட்டவை இடம்பெறும், சுற்றுலாபயணிகள் திரளாக வருகை தருவர், வருவாய் ஈட்டலாம் என்ற எதிர்பார்ப்போடு இருந்த வாடகை வாகன ஓட்டுனர்கள், குதிரை ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டுவோர், தங்கும் விடுதி உரிமையாளர்கள்  சிறுவியாபாரிகள் வரை எதிர்பார்ப்பில் இருந்தது வீணானது. கொரோனா பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் கோடைவிழா, மலர் கண்காட்சி நடத்தமுடியாத சூழ்நிலை உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்,

பெருந்தொற்றுக் காலத்தால் வெறிச்சோடிய கொடைக்கானல் : வேதனையில் சுற்றுலா வணிகர்கள்

மேலும்கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஸ்கார்டன் ஆகிய பகுதிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கி கண்களை கவரும்  நிலையில் அதை கண்டு ரசிக்கத்தான் சுற்றுலாபயணிகள் இல்லாதநிலையும்  உள்ளது.கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி மட்டுமே வாழ்க்கையை பல்வேறு தரப்பினரும் நகர்த்தி வரும் நிலையில்    சுற்றுலாப்பயணிகள் யாரும் வராததால் கடைகள் அடைக்கப்பட்டு கடைகளில் உள்ள பொருட்கள் வீணாகி குப்பைகளில்  கொட்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் விரைவில் ஊரடங்கை தளர்வு செய்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு தளர்வுகளுடன்  வருவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும்  இனிவரும் காலங்களில்  வாடகை தள்ளுபடி, வாகன கடன், வீட்டுக்கடன், வங்கிக்கடன் உள்ளிட்டவைகளுக்கு காலஅவகாசம் வழங்குவதற்கு வழிவகை  செய்ய வேண்டும் எனவும் நிவாரண நிதியாக சிறப்பு தொகை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கொடைக்கானலில் இதமான தட்பவெப்பநிலை நிலவும் நிலையில் அதிகபட்சமாக பகலில் 20 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 13 டிகிரி செல்சியசும் நிலவி ரம்மியமான சூழல் காணப்படுகிறது.காற்றில் 70 சதவீதம் ஈரப்பதமும் உள்ளது, இந்த ஆண்டு குளுமையை அனுபவிக்க முடியாத நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளனர். வாழ்வாதாரத்தை இழுந்த நிலையில் கொடைக்கானல் மக்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget