மேலும் அறிய

ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை ரத்து - கரூர் கலெக்டரின் செயலை கண்டித்த ஆசிரியர்கள்..!

ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கரூரில் உள்ளூர் விடுமுறையை, மாவட்ட நிர்வாகம் திடீரென ரத்து செய்தது.

இந்து பண்டிகையான, ஆடி 18க்கு கரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை திடீரென ரத்து செய்ததால், ஆசிரியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதனால், கொங்கு மண்டல மாவட்டங்களில், உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். அதிமுக ஆட்சியில் கரூர் மாவட்டத்தில் ஆடி, 18க்கு, உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கரூரில் உள்ளூர் விடுமுறையை, மாவட்ட நிர்வாகம் திடீரென ரத்து செய்தது.



ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை ரத்து - கரூர் கலெக்டரின் செயலை கண்டித்த ஆசிரியர்கள்..!

இருந்தபோதும், ஈட்டு விடுப்பின் கீழ், 86 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் விடுமுறை கேட்டு முதன்மை கல்வி அலுவலர் கீதாவுக்கு, கடிதம் அனுப்பி இருந்தனர். அவர், அனுமதி அளித்த நிலையில், அப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் திடீரென மாவட்ட நிர்வாகம் விடுமுறையை ரத்து செய்தது. இப்படி முக்கியமான இந்து பண்டிகைக்கு விடுமுறை மறுக்கப்பட்டதால், ஆசிரியர்கள் இடையே கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது.

ஆடிப்பெருக்கை கொண்டாடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். அந்த அடிப்படையில் இந்தாண்டும் உள்ளூர் விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடுமுறை பற்றி எந்த அறிவிப்பும் வராததால், பல பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்களின் வேண்டுகோளின் படி, ஈடு செய்யும் விடுப்பாக கடிதம் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 




ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை ரத்து - கரூர் கலெக்டரின் செயலை கண்டித்த ஆசிரியர்கள்..!

மாணவர்களுக்கும் விடுமுறை என தகவல் வழங்கப்பட்ட நிலையில், திடீரென இரவு, 9 மணிக்கு மேல் தலைமை ஆசிரியர்கள் மூலமாக அந்தந்த பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டதாகவும், அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்டை மாவட்டங்களில், உள்ளூர் விடுமுறை விடப்பட்ட நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய அவசியம், கலெக்டருக்கு ஏன் ஏற்பட்டது என, தெரியவில்லை. ஆசிரியர்கள் என்றால் ஒரு இளக்காரமான மனநிலையில் அணுகும் கலெக்டரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 


ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை ரத்து - கரூர் கலெக்டரின் செயலை கண்டித்த ஆசிரியர்கள்..!

விடுமுறை விடப்பட்டு, அதனை ஈடு செய்ய, வரும் சனிக்கிழமை அல்லது வேறொரு சனிக்கிழமையில் பள்ளிக்கூடம் செயல்பட்டால் என்ன குறைந்து விடப்போகிறது என தெரியவில்லை? ஆசிரியர்கள் தங்களுடைய உரிமை குறித்து எந்தவித போராட்டத்திலும் குரல் எழுப்பாத காரணத்தால், இன்று அடிமைகள் போல நடத்தப்படும் நிலையை ஏற்றுக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். நியாயமான அடிப்படை கோரிக்கைகளுக்கு கூட இடம் கொடுக்காத கலெக்டரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
Embed widget