மேலும் அறிய

அமராவதி ஆற்றில் முட்செடிகளை அகற்ற வேண்டும் - கரூர் மக்கள் கோரிக்கை

கரூர் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள சீத்த முட்செடிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து அமராவதி ஆறு, காவிரியை நோக்கி பயணிக்கிறது. அமராவதி ஆறு கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், செட்டிபாளையம், பெரியாண்டாங் கோவில் வழியாக கரூர் நகரை வந்தடைந்து பின்னர், பசுபதிபாளையம், புலியூர், மேலப்பாளையம் வழியாகவும், திருமுக்கூடலூர் வழியாக செல்லும் காவிரி ஆற்றுடன் இணைந்து, மாயனூர் நோக்கி ஒன்றுபட்ட காவிரி ஆறு பயணிக்கிறது.இதில் அமராவதி ஆறு, கரூர் மாவட்டத்தில் பயணிக்கும் செட்டிபாளையம், சுக்காளியூர், லைட் ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் வரை, அமராவதி ஆற்றை முற்றிலும் பாதிக்கும் வகையில் சீத்த  முட்செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளது. 

 


அமராவதி ஆற்றில் முட்செடிகளை அகற்ற வேண்டும் - கரூர் மக்கள் கோரிக்கை

சீத்த முட்செடிகள் மட்டுமல்லாமல், குப்பைகளும் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன. இதனால் ஆற்றின் அருகில் அமைந்துள்ள வீடுகளில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.  இந்த முட்செடிகளை அகற்றாவிட்டால், மக்கள் தங்கி இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீத்த முட்செடிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைவதோடு ஆற்றின் போக்கை மாற்றுவது, போன்ற பல்வேறு பாதிப்புகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் அரசு சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும், தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் அமராவதி ஆற்றுப்பகுதியில் படர்ந்து இருந்த, சீத்த முட்செடிகள் போர்க்கால அடிப்படையில் அந்த சமயத்தில் அகற்றப்பட்டன.

 


அமராவதி ஆற்றில் முட்செடிகளை அகற்ற வேண்டும் - கரூர் மக்கள் கோரிக்கை

தற்போதைய நிலையில், திரும்பவும் அமராவதி ஆற்றில் சீத்த செடிகள் மற்றும் குப்பைகள் அதிக அளவு ஆக்கிரமித்துள்ளது. தமிழக முழுவதும் சீத்த முட்செடிகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி ஆற்றுப்பகுதியை முற்றிலும் ஆக்கிரமித்து, பல்வேறு பாதிப்புகளையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வரும் இந்த சீத்த முட்செடிகளை போர்க்கால அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் மற்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, அதனை முற்றிலும் அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


அமராவதி ஆற்றில் முட்செடிகளை அகற்ற வேண்டும் - கரூர் மக்கள் கோரிக்கை

 

இந்த வருடம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளது. இந்த வருடம் அதிக இடங்களில் வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இந்த சமயத்தில் பெய்யும் மழை தான் ஆண்டின் சராசரி மழையை எட்ட உதவுகிறது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள சீத்த முட்செடிகளை விரைந்து அகற்ற, தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget