மேலும் அறிய

இலவச திருமண திட்டத்தில் 2 ஜோடிகள் மட்டுமே பயனாளியாக தேர்வு - பதாகையால் ஏமாறும் ஏழை மக்கள்

தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டவாறு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோவில் மூலம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம் நடக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குளித்தலையை அடுத்த ஐயர் மலை இரத்தினகிரிஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமண திட்டத்தில் இரண்டு ஜோடி மட்டுமே பயனாளியாக தேர்வு செய்யப்பட  உள்ளதால், ஏழை மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். ரத்தினகிரீஸ்வரர் கோயில் அலுவலகத்தின் முன் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 


இலவச திருமண திட்டத்தில் 2 ஜோடிகள் மட்டுமே பயனாளியாக தேர்வு - பதாகையால் ஏமாறும் ஏழை மக்கள்

அதில் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டவாறு ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம் நடக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின்படி திருமாங்கல்யம் பத்தாயிரம் ரூபாய், மணமகன் ஆடைக்கு 2000 ரூபாய், மணமகள் ஆடைக்கு 2000 ரூபாய், மணமக்கள் வீட்டார் 20 பேருக்கு விருந்து உணவுக்கு 2000 ரூபாய், பூமாலை புஷ்பம் ஆயிரம் ரூபாய் சீர்வரிசை, பாத்திரங்கள் மூன்றாயிரம் ரூபாய் இதர செலவு 1000 ரூபாய் என மொத்தம் 20 ஆயிரம் ரூபாயை திட்ட மதிப்பீடு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதர விவரங்களை கோயில் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதாகையை பார்த்து தினமும் பத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கோயில் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். கோயில் முன்பு வைக்கப்பட்டுள்ள பதாகையில் திருமண நாள் எப்போது எத்தனை ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்படும் போன்ற தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. பதாகையை பார்க்கும் ஏழை மக்களுக்கு இரண்டு ஜோடிக்கு மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படும் என்ற தகவல் தெரியாமல்  எஞ்சியவர்களுக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது.


இலவச திருமண திட்டத்தில் 2 ஜோடிகள் மட்டுமே பயனாளியாக தேர்வு - பதாகையால் ஏமாறும் ஏழை மக்கள்

இதுகுறித்து அய்யர் மலை கோயில் செயல் அலுவலர் அனிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,
இலவச திருமண திட்டம் குறித்த முழு விவரத்தினை பொதுமக்களுக்கு தெரிவிக்க பதாகை வைக்கப்பட்டுள்ளது. அய்யர்மலை கோயில் மூலம் இரண்டு ஜோடிகள் மட்டும் இலவச திருமண திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்வு செய்யப்படும் ஜோடிக்கு வரும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது. பதாகையில் விடுபட்டுள்ள  தவறுகள் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இலவச திருமண திட்டத்தில் 2 ஜோடிகள் மட்டுமே பயனாளியாக தேர்வு - பதாகையால் ஏமாறும் ஏழை மக்கள்

இரண்டு ஜோடிக்கு மட்டுமே திருமணம் என்பதால் இலவச திருமண திட்டத்தில் பயன் பெறுவோம் என்ற நம்பிக்கையில் விண்ணப்பங்களை அளிப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் காத்திருக்கிறது. குளித்தலை கடம்பர் கோயிலிலும் இரண்டு ஜோடிக்கு மட்டுமே இலவச திருமண நடத்தி வைக்கப்பட உள்ளது. ஏழை எளிய மக்கள் ஏராளமானோர் இருக்கும் நிலையில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், இத்திட்டமானது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு செயலாகிவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
சொத்து வாங்குறீங்களா ? ஆன்லைனில் பட்டா , சிட்டா , வரைபடம் சரிபார்ப்பது எப்படி ?
சொத்து வாங்குறீங்களா ? ஆன்லைனில் பட்டா , சிட்டா , வரைபடம் சரிபார்ப்பது எப்படி ?
செங்கல்பட்டு மக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ₹25 லட்சம் வரை அரசாங்கக் கடன்.. உடனே இதைப் படிங்க!
செங்கல்பட்டு மக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ₹25 லட்சம் வரை அரசாங்கக் கடன்.. உடனே இதைப் படிங்க!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget