மேலும் அறிய

இலவச திருமண திட்டத்தில் 2 ஜோடிகள் மட்டுமே பயனாளியாக தேர்வு - பதாகையால் ஏமாறும் ஏழை மக்கள்

தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டவாறு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோவில் மூலம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம் நடக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குளித்தலையை அடுத்த ஐயர் மலை இரத்தினகிரிஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமண திட்டத்தில் இரண்டு ஜோடி மட்டுமே பயனாளியாக தேர்வு செய்யப்பட  உள்ளதால், ஏழை மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். ரத்தினகிரீஸ்வரர் கோயில் அலுவலகத்தின் முன் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 


இலவச திருமண திட்டத்தில் 2 ஜோடிகள் மட்டுமே பயனாளியாக தேர்வு - பதாகையால் ஏமாறும் ஏழை மக்கள்

அதில் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டவாறு ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம் நடக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின்படி திருமாங்கல்யம் பத்தாயிரம் ரூபாய், மணமகன் ஆடைக்கு 2000 ரூபாய், மணமகள் ஆடைக்கு 2000 ரூபாய், மணமக்கள் வீட்டார் 20 பேருக்கு விருந்து உணவுக்கு 2000 ரூபாய், பூமாலை புஷ்பம் ஆயிரம் ரூபாய் சீர்வரிசை, பாத்திரங்கள் மூன்றாயிரம் ரூபாய் இதர செலவு 1000 ரூபாய் என மொத்தம் 20 ஆயிரம் ரூபாயை திட்ட மதிப்பீடு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதர விவரங்களை கோயில் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதாகையை பார்த்து தினமும் பத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கோயில் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். கோயில் முன்பு வைக்கப்பட்டுள்ள பதாகையில் திருமண நாள் எப்போது எத்தனை ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்படும் போன்ற தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. பதாகையை பார்க்கும் ஏழை மக்களுக்கு இரண்டு ஜோடிக்கு மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படும் என்ற தகவல் தெரியாமல்  எஞ்சியவர்களுக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது.


இலவச திருமண திட்டத்தில் 2 ஜோடிகள் மட்டுமே பயனாளியாக தேர்வு - பதாகையால் ஏமாறும் ஏழை மக்கள்

இதுகுறித்து அய்யர் மலை கோயில் செயல் அலுவலர் அனிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,
இலவச திருமண திட்டம் குறித்த முழு விவரத்தினை பொதுமக்களுக்கு தெரிவிக்க பதாகை வைக்கப்பட்டுள்ளது. அய்யர்மலை கோயில் மூலம் இரண்டு ஜோடிகள் மட்டும் இலவச திருமண திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்வு செய்யப்படும் ஜோடிக்கு வரும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது. பதாகையில் விடுபட்டுள்ள  தவறுகள் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இலவச திருமண திட்டத்தில் 2 ஜோடிகள் மட்டுமே பயனாளியாக தேர்வு - பதாகையால் ஏமாறும் ஏழை மக்கள்

இரண்டு ஜோடிக்கு மட்டுமே திருமணம் என்பதால் இலவச திருமண திட்டத்தில் பயன் பெறுவோம் என்ற நம்பிக்கையில் விண்ணப்பங்களை அளிப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் காத்திருக்கிறது. குளித்தலை கடம்பர் கோயிலிலும் இரண்டு ஜோடிக்கு மட்டுமே இலவச திருமண நடத்தி வைக்கப்பட உள்ளது. ஏழை எளிய மக்கள் ஏராளமானோர் இருக்கும் நிலையில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், இத்திட்டமானது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு செயலாகிவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (01-08-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (01-08-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
Cuddalore Power Cut 01.08.2026 : கடலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை: உங்க ஏரியா இருக்கா?
Cuddalore Power Cut 01.08.2026 : கடலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை: உங்க ஏரியா இருக்கா?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget