மேலும் அறிய

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க பெற்றோர்களை அழைத்து பேசிய கரூர் எஸ்பி

34 நம்பர் போர்டு இல்லாத மற்றும் போலீசான நம்பர் போர்டு உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 41 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு, வாகன விபத்தை குறைக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு 1,741 வழக்குகள் பதிவு செய்து  உள்ளனர்.           

 


சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க பெற்றோர்களை அழைத்து பேசிய கரூர் எஸ்பி

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு சிறப்பு ரோந்து பணியாக குற்ற தடுப்பு மற்றும் வாகன விபத்து குறைப்பதே தொடர்பாக கரூர் மாவட்ட போலீசார் சூப்பிரண்டு சுந்தர வதனம் உத்தரவுபடி, போலீசார் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் 1,741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 34 நம்பர் போர்டு இல்லாத மற்றும் போலீசான நம்பர் போர்டு உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 41 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க வேண்டி முக்கியமாக 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனத்தில் ஓட்டி சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க வேண்டி மாவட்டம் முழுவதும் தீவிர வாகனம் சோதனை செய்து 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறுவர்களின் பெற்றோர்கள்  65 பேரை நேரில் அழைத்து அறிவுரை வழங்கப்பட்டது.

 


சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க பெற்றோர்களை அழைத்து பேசிய கரூர் எஸ்பி

 

பள்ளி மற்றும் கல்லூரிகளில்  27 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.  27 பேர் கைது முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் மூலம்   51 பேர் சோதனை செய்யப்பட்டனர். குற்ற தடுப்பு தொடர்பாக இரவு நேரங்களில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 27 கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் குற்ற வழக்குகளை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பிடி யானை பிறக்கப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 


சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க பெற்றோர்களை அழைத்து பேசிய கரூர் எஸ்பி

 

மேலும் குற்ற தடுப்பு மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்து தொடர்பாக தொடர்பு சோதனை நடைபெறும் எனவும், வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து வாகன சோதனை செய்யப்படும். மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். 

கரூர் மாநகராட்சி பழைய நிதிமன்ற வளாகத்தில் சமரச நாள் தினமாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட நிதிபதி ஆர். சண்முக சுந்தரம் துவங்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தல் படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ம் தேதி சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் Roc.No.28/2023/TNMCC/Hct.MS என்ற உத்தரவின்படி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சமரச நாள் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.     அதன்படி கரூர் மாவட்ட சமரச மையம் சார்பாக 10/04/2023 ஆம் தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது.    இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பேரணியானது நடத்தப்பட உள்ளது.    இந்த விழிப்புணர்வு பேரணியில் கொங்கு, அரசு மற்றும்  வள்ளுவர் கலைக் கல்லூரி மாணவர்களை கொண்டு சமரசம் பற்றிய விழிப்புணர்வு பேரணியானது நடத்தப்படுகிறது. இந்த விழிப்புணர்வு பேரணியானது ஐந்து ரோடு பழைய நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி அண்ணா வளைவு,  நால்ரோடு,  பஜார்,  மாரியம்மன் கோவில் மற்றும் அரச மரத்து ரோடு வழியாக பழைய நீதிமன்ற வளாகத்தை அடைவார்கள்.  இது தவிர ஆட்டோ மூலமாக சமரச மையத்தின் பணிகள் மற்றும்  சமரசம் பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது.     மேலும் இத்துடன் நோட்டீஸ் கொடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.    இந்த நிகழ்வானது ஏப்ரல் 10-ம் தேதி முதல் 13-ம் ஆம் தேதி வரை தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களலிலும் மற்றும் குளித்தலை ஒருங்கிணைந்த நிதிமன்ற வளாகத்திலும் கொண்டாடப்பட உள்ளது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget