![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bank Locked: வாடகை தராததால் அரசு வங்கிக்கு பூட்டு போட்ட கட்டட உரிமையாளர்; கரூரில் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி
வாடகை தராததால் வங்கியின் கட்டடத்துக்கு பூட்டு போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
![Bank Locked: வாடகை தராததால் அரசு வங்கிக்கு பூட்டு போட்ட கட்டட உரிமையாளர்; கரூரில் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி karur central bank of india government bank locks up by Builder for non-payment of rent Bank Locked: வாடகை தராததால் அரசு வங்கிக்கு பூட்டு போட்ட கட்டட உரிமையாளர்; கரூரில் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/09/20cedbdd066a7efadfa12a14c7439cd11662736253757175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூரில் இயங்கி வந்த அரசு வங்கியின் கட்டடத்துக்கு வாடகை தராததால், கட்டடத்திற்கு உரிமையாளர் பூட்டு போட்டார்.
3 மாதம் பாக்கி:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை டிகேடி மில் அருகே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கே முன்பு கட்டிடத்தின் ஒப்பந்த காலம் நிறைவுற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஒப்பந்த காலம் நிறைவடைந்ததையொட்டி வங்கியை காலி செய்து தருமாறு கட்டட உரிமையாளர் கேட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
அரசு வங்கிக்கு பூட்டு:
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக வாடகை செலுத்தாமல் பாக்கியை வங்கி நிர்வாகம் வைத்திருந்ததாக தெரிகிறது. இதையடுத்து வங்கி செயல்பட்டு வந்த கட்டடத்தின் உரிமையாளர், வங்கிக்கு நேற்று பூட்டு போட்டார்.
வங்கி பூட்டு போட்டதை பார்த்த வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வங்கி தரப்பில் பூட்டு அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மின் இணைப்பையும் கட்டிட உரிமையாளர் துண்டித்தார். இதையடுத்து வங்கி நேற்று மின்சாரம் இன்றி இயங்கியது. வாடிக்கையாளர்கள் மின் வசதி இல்லாததால், திருப்பி அனுப்பப்பட்டனர்.
வங்கி அதிகாரிகள் உறுதி:
இதையடுத்து, கட்டட உரிமையாளரை சந்தித்து, நிலுவை தொகையை செலுத்தி குத்தகை பாக்கியை நிவர்த்தி செய்து தருவதாக வங்கி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.அதையடுத்து வங்கி இயங்கி வந்த கட்டடத்துக்கு மின் இணைப்பை கட்டட உரிமையாளர் வழங்கினார். அரசு வங்கியை தனிநபர் பூட்டிய சம்பவம் பொதுமக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read: Bank Holidays September 2022: செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாள் வங்கி விடுமுறை தெரியுமா?
Now bank anywhere, anytime with the comprehensive Cent Mobile app.#MobileBanking#DigitalBanking#AmritMahotsav#AzadiKaAmritMahotsav#CentralToYouSince1911 pic.twitter.com/tllINutmIc
— Central Bank of India (@centralbank_in) September 9, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)