![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 12 பவுன் நகை திருட்டு - குளித்தலையில் அதிர்ச்சி
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி தாக்கி 12 பவுன் நகைகள் திருட்டு.
![Crime: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 12 பவுன் நகை திருட்டு - குளித்தலையில் அதிர்ச்சி karur: attacking old lady and stealing 12 pounds of jewelry in kulithalai Crime: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 12 பவுன் நகை திருட்டு - குளித்தலையில் அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/937c0660363d4433a5d046c4056e326b1668686227882183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குளித்தலையின் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 12 பவுன் நகைகள் திருடிசென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை கீழ் முதலியார் தெருவை சேர்ந்த நடராஜ். இவரது மனைவி திரிபுரசுந்தரி வயது 82. நடராஜன் ஏற்கனவே இறந்து விட்டதால் இவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இவரது கடைசி மகனான நாராயணன் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. மூதாட்டி தனது கடைசி மகனான நாராயணன் என்பவருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
நாராயணன் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்துவருகிறார். அவர் தினசரி வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். அதுபோல நாராயணன் சுமார் 6. 45 மணி அளவில் தனது வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்பொழுது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது அவரது தாயார் திரிபுரசுந்தரி படுக்கையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டுள்ளார். மேலும் அவரது தலை மற்றும் நெற்றிப் பகுதிகளில் அடிபட்டு ரத்த காயம் இருந்துள்ளது. அவரது 2 காதுகளும் அறுந்தநிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்த நாராயணன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் உடனடியாக குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அவரது தாயை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை திருடிச் செல்லும் நோக்கத்துடன் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை நெற்றி மற்றும் தலைப்பகுதிகளில் அடித்து காயப்படுத்தி அவர் காதில் அணிந்திருந்த, இரண்டு பவுன் மாட்டலுடன் கூடிய தோடை அப்படியே பிய்த்து எடுத்து, கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் சங்கிலி, கையில் அணிந்திருந்த மூன்று பவுன் வளையல் உட்பட 12 பவுன் எடை கொண்ட தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.
பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மூதாட்டியை அடித்து காயப்படுத்தி தங்க நகை திருடப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து குளித்தலை அரசு மருத்துவமனை வந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிராண்டு ஸ்ரீதர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் மூதாட்டியை தாக்கி தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)