மேலும் அறிய

“சிறையில் பேப்பர் படித்தேன்; தாங்க முடியவில்லை” - ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியது குறித்து கருக்கா வினோத்

சிறையில் இருக்கும்போது பேப்பர் படித்ததாகவும், அதில் மாணவர்கள் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொள்வதை படித்து தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியது ஏன் என்பது குறித்து கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சிறையில் இருக்கும்போது பேப்பர் படித்ததாகவும், அதில் மாணவர்கள் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொள்வதை படித்து தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் விரைந்து அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். சம்பவம் தொடர்பாக கிண்டி சைதாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த செயலில் ஈடுபட்டது பிரபல ரவுடி கருக்கா வினோத் என தெரிய வந்தது.

ஆளுநர் மாளிகை அளித்த புகாரை தொடர்ந்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை டிஜிபி அலுவலகம் வெளியிட்டது. மேலும், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை, சர்தார் வல்லபாய் படேல் சாலையில் தான் வீசப்பட்டது. அவர் 4 பெட்ரோல் குண்டுகளில் இரண்டு வெடித்தன. ரவுடி கருக்கா வினோத்தை 5 காவலர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் பிடிக்க வரும்போது அவர்கள் மீது வினோத் பெட்ரோல் குண்டு வீச முயன்றான். ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, விஷமிகள் உள்ளே நுழைய முயன்றதாக கூறியது உண்மையில்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கிண்டி போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று மனு மீதான விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் ஏன் பெட்ரோல் குண்டு வீசினார் என்பது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அப்போது பேசிய கருக்கா வினோத், “ஜெயிலில் அடைப்பட்டிருந்த சமயத்தில் தினமும் பேப்பர் படிக்கும் போது நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது போன்ற செய்தி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வீசினேன். எனது மகன் தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருவதால் அவனை மெடிக்கல் காலேஜ் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. நீட் தேர்வினால் எனது ஆசை பறிபோகி விடும். பி எப் ஐ அமைப்பினருக்கும், தனக்கும் எந்த தொடர்புமில்லை என்றும், ஒரே நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்ததாகவும்” வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசிகள் சிறையில் இருப்பதால் அவர்கள் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும் அவர்களை உடனே வெளியே விட வேண்டும் எனவும் அதன் கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என வாக்குமூலத்தில் கருக்கா வினோத் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்ததற்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை என கருக்கா வினோத் கூறியுள்ளார். மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து கிண்டி போலீசார் கருக்கா வினோத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
MK Stalin Health: அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த  திட்டம்..!
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்..!
Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
MK Stalin Health: அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த  திட்டம்..!
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்..!
Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
Tamil Nadu Next DGP : ’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி இவரா?’  தயாரான பட்டியல்..!
’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?’ பட்டியல் தயார்..!
Chennai Power Cut: சென்னையில் நாளை (22.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
சென்னையில் நாளை (22.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
Embed widget