மேலும் அறிய

தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு முன்னோட்டமாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்டம் தோறும் மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்:

மாநாட்டில் 98 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.1583.80 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.1500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை தாண்டி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 5 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

1 டிரில்லியன் பொருளாதார இலக்கு:

புதிய தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறி பேசிய கனிமொழி எம்.பி , தமிழகம் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. தமிழகம் தொழில் தொடங்குவதற்கான முக்கியமான தளமாக மாறி உள்ளது. தமிழகத்துக்கு அதிக முதலீட்டாளர்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இது போன்ற மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் 2030-ம் ஆண்டு ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறார்.


தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

இதற்காக பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். தமிழகம் அமைதிப் பூங்காவாக, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய மாநிலமாக மாறி உள்ளது. இதனால் பல நாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதே போன்ற கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் உயர்ந்த இலக்கை அடைந்து உள்ளோம். அதிக உயர்கல்வி பெற்றவர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதே போன்று தொழில் முனைவோர் ஒரே இடத்தில் அனைத்து அனுமதிகளையும் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தொழில் முதலீட்டாளர்களுக்கு அரசு உதவியாக இருந்த வருகிறது.


தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

தமிழக அரசு உறுதுணை:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மிகவும் முக்கியமான துறை ஆகும். தமிழ்நாட்டில் 49.45 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பெண்கள் பலர் தொழில் முனைவோராக உள்ளனர். ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் சிறு, குறு நிறுவனங்கள் 49 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இது மிகவும் முக்கியமானது ஆகும். சிறு, சிறு தொழில்நுட்ப மாற்றங்களால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கும் நிலை ஏற்படும்.

இதனல் நாம் தொடர்ந்து அனைவரும் ஒருங்கிணைந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்கள் அதிக அளவில் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. நீங்கள் அதிக ஆர்வத்தோடு செயல்பட வேண்டும். உங்களுக்கு எந்தெந்த வகையில் உதவி தேவையோ, அந்த வகையில் உங்கள் கனவுகளை நிறைவேற்ற, தமிழக அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.


தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கப்பல் முகவர் எட்வின் சாமுவேல், தூத்துக்குடி துடிசியா தலைவர் நேருபிரகாஷ், தூத்துக்குடி இந்திய வியாபார தொழில் சங்க தலைவர் கோடீசுவரன்கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விஜய் ஆனந்த், முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget