மேலும் அறிய

தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு முன்னோட்டமாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்டம் தோறும் மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்:

மாநாட்டில் 98 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.1583.80 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.1500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை தாண்டி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 5 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

1 டிரில்லியன் பொருளாதார இலக்கு:

புதிய தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறி பேசிய கனிமொழி எம்.பி , தமிழகம் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. தமிழகம் தொழில் தொடங்குவதற்கான முக்கியமான தளமாக மாறி உள்ளது. தமிழகத்துக்கு அதிக முதலீட்டாளர்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இது போன்ற மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் 2030-ம் ஆண்டு ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறார்.


தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

இதற்காக பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். தமிழகம் அமைதிப் பூங்காவாக, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய மாநிலமாக மாறி உள்ளது. இதனால் பல நாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதே போன்ற கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் உயர்ந்த இலக்கை அடைந்து உள்ளோம். அதிக உயர்கல்வி பெற்றவர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதே போன்று தொழில் முனைவோர் ஒரே இடத்தில் அனைத்து அனுமதிகளையும் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தொழில் முதலீட்டாளர்களுக்கு அரசு உதவியாக இருந்த வருகிறது.


தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

தமிழக அரசு உறுதுணை:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மிகவும் முக்கியமான துறை ஆகும். தமிழ்நாட்டில் 49.45 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பெண்கள் பலர் தொழில் முனைவோராக உள்ளனர். ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் சிறு, குறு நிறுவனங்கள் 49 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இது மிகவும் முக்கியமானது ஆகும். சிறு, சிறு தொழில்நுட்ப மாற்றங்களால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கும் நிலை ஏற்படும்.

இதனல் நாம் தொடர்ந்து அனைவரும் ஒருங்கிணைந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்கள் அதிக அளவில் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. நீங்கள் அதிக ஆர்வத்தோடு செயல்பட வேண்டும். உங்களுக்கு எந்தெந்த வகையில் உதவி தேவையோ, அந்த வகையில் உங்கள் கனவுகளை நிறைவேற்ற, தமிழக அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.


தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கப்பல் முகவர் எட்வின் சாமுவேல், தூத்துக்குடி துடிசியா தலைவர் நேருபிரகாஷ், தூத்துக்குடி இந்திய வியாபார தொழில் சங்க தலைவர் கோடீசுவரன்கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விஜய் ஆனந்த், முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget