![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
1000 Rs Scheme: மகளிர் உரிமை தொகை: குடும்ப தலைவிகளே.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; லேட் பண்ணாம உடனே போங்க!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பயனாளர்கள் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள் முகாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![1000 Rs Scheme: மகளிர் உரிமை தொகை: குடும்ப தலைவிகளே.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; லேட் பண்ணாம உடனே போங்க! Kalaignar Womens Assistance Scheme application campaign today last day for apply 1000 Rs Scheme: மகளிர் உரிமை தொகை: குடும்ப தலைவிகளே.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; லேட் பண்ணாம உடனே போங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/bd1408a2f3673200e99b41e0bf15c3f41692499254972572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
1000 Rs Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பயனாளர்கள் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள் முகாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:
தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தகுதியான பயனாளர்களை திட்டத்தில் இணைப்பதற்கான பணிகள் அரசு சார்பில் வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட முகாம் ஜுலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இந்த முகாம்களின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் திட்டத்தில் இணைய 1.54 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கூடுதல் விதிவிலக்கு:
இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
மூன்றாம் கட்ட முகாம்:
இந்நிலையில், விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே நடைபெற்ற முகாம்களின் போது பதிவு செய்ய தவறிய தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படியே, கடந்த 18ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், இன்றுடன் (ஆகஸ்ட் 20) நிறைவடைய இருக்கிறது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்த நபர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேண்டுகோள்:
அதேபோல, ஏற்கனவே விண்ணப்பம் பெற்றும் பதிவு செய்ய தவறியவர்கள், தகுதி வாய்ந்த பெண்கள் அனைவரும் இந்தத சிறப்பு முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பப் படிவங்கள் பெறாத குடும்ப அட்டை தாரர்கள் அவர்களுக்குரிய முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் பொறுபு அலுவரிடம் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அதே முகாமில் அளிள்தது பயனடையலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)