![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Fishing Ban: இன்று முதல் அமலுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. எத்தனை நாட்கள்? முழு விவரம்..
கடல் மீன் இன பெருக்கத்தை ஒட்டி தமிழ்நாட்டில் இன்று முதல் மீன்பிடி தடை காலம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று தொடங்கும் இந்த மீன் பிடி தடைக்காலம் ஜூன் 14-ஆம் தேதி வரை அதாவது 61 நாட்களுக்கு இருக்கும்.
![Fishing Ban: இன்று முதல் அமலுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. எத்தனை நாட்கள்? முழு விவரம்.. It has been announced that the ban on fishing which started today will continue till June 15. Fishing Ban: இன்று முதல் அமலுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. எத்தனை நாட்கள்? முழு விவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/15/09794c803669ba60c15986ac9be4c73d1681535291490589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடல் மீன் இன பெருக்கத்தையொட்டி தமிழ்நாட்டில் இன்று முதல் மீன்பிடி தடை காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று தொடங்கும் இந்த மீன் பிடி தடைக்காலம் ஜூன் 14ஆம் தேதி வரை அதாவது 61 நாட்களுக்கு இருக்கும்.
கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் விசை படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டும். திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மீனவர்கள் இந்த காலத்தில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரை மீனவர்கள் தங்கள் விசை படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
தமிழ்நாட்டில் இன்று முதல் விசை படகுகள் கடலுக்கு செல்லாது என்ற காரணத்தால் மீன் வரத்து படிப்படியாக குறையும். அதேபோல் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் கிடைக்காது. இதனால் மீன் விலை உயரும். மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மீன் கொண்டு வரப்படும். பொதுவாக வஞ்சிரம், வவ்வால், காலா, பன்னை, டூனா, டைகர் இறால், புளூ கிராப், மட் கிராப், லாப்ஸ்டர், கனவா, திருக்கை ஆகிய மீன் வகைகள் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் ஆகும். இவை அனைத்தும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும்.
மீன்பிடி தடை காலத்தில் அதிகபட்சமாக வஞ்சிரம் ரூபாய் 2000 வரை விற்பனை செய்யப்படும். வெள்ளை வவ்வால் ரூபாய் 1000 முதல் ரூபாய் 1500 வரை விற்பனை செய்யப்படும். சங்கரா – ரூபாய் 500 – 600, இறால் – ரூபாய் 500 என விற்பனை செய்யப்படும். மீன் பிடி தடைக்காலத்தில் ஒரு சில மீன்கள் மட்டுமே கிடைக்கும்.
இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ். பழனிசாமி கூறுகையில்: ”ஏப்ரல் 15-ம் தேதி (இன்று) முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஆகும். மேற்கண்ட காலத்தில் தமிழகக் கடலோரப் பகுதிகளில் இருந்து விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்குள் செல்லக்கூடாது. எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் தமிழக எல்லையில் இருந்து ஆந்திர மாநில கடல்பகுதிக்கு செல்லக்கூடாது. மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த பின்பு, கரைக்கு திரும்பும் மீன்பிடி விசைப்படகுகள் விவரங்கள் உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படவேண்டும். கரைக்கு திரும்பாத படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)