மேலும் அறிய

TN Rain Alert : “எந்தெந்த மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும்” இதோ லிஸ்ட் – மக்களே எச்சரிக்கை..!

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக் கூடும்.

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகியிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

நேற்று கோவை, மதுரையில் மிக கன மழை பெய்து பல இடங்களில் வெள்ளக் காடாக மாறின. வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியும் இப்போது புதிதாக உருவாகியுள்ள தாழ்வு பகுதி காரணமாகவும் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கன மழை பெய்யும் என கூறப்படுகிறது.

4 நாட்களுக்கு அலெர்ட் ஆக இருங்க மக்களே

இன்று உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு, மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை இது நகரகூடும் என்றும் தெரிகிறது. இதனால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எந்தெந்த மாவட்டங்களில் அதி கன மழை

இதனால், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக் கூடும்.

மேலும் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு எச்சரிக்கை

இது தொடர்பாக தலைமைச் செயலக பொதுத் துறையில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 14ஆம் தேதியான இன்று : விழுபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இன்று மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

17ஆம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

வரும் 17ஆம் தேதி வரை அதி கன மழை பெய்யுமென்பதால், சாலை போக்குவரத்து, மரம் விழுவதை உடனடியாக அகற்றுதல், வெள்ள நீரை, ஏரி, ஆறுகளில் திருப்பிவிடுதல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.

தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தமிழ்நாடு அரசு சார்பில் முனெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன, பேரிடர் மீட்பு படையினர் பல மாவட்டங்களில் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில்  நேற்று துணை முதல்வர் உதயநிதி நேரடியாக ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் எல்லா மாவட்ட நிர்வாகமும் மழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 12:29 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Embed widget