மேலும் அறிய

TN Rain Alert : “எந்தெந்த மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும்” இதோ லிஸ்ட் – மக்களே எச்சரிக்கை..!

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக் கூடும்.

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகியிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

நேற்று கோவை, மதுரையில் மிக கன மழை பெய்து பல இடங்களில் வெள்ளக் காடாக மாறின. வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியும் இப்போது புதிதாக உருவாகியுள்ள தாழ்வு பகுதி காரணமாகவும் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கன மழை பெய்யும் என கூறப்படுகிறது.

4 நாட்களுக்கு அலெர்ட் ஆக இருங்க மக்களே

இன்று உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு, மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை இது நகரகூடும் என்றும் தெரிகிறது. இதனால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எந்தெந்த மாவட்டங்களில் அதி கன மழை

இதனால், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக் கூடும்.

மேலும் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு எச்சரிக்கை

இது தொடர்பாக தலைமைச் செயலக பொதுத் துறையில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 14ஆம் தேதியான இன்று : விழுபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இன்று மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

17ஆம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

வரும் 17ஆம் தேதி வரை அதி கன மழை பெய்யுமென்பதால், சாலை போக்குவரத்து, மரம் விழுவதை உடனடியாக அகற்றுதல், வெள்ள நீரை, ஏரி, ஆறுகளில் திருப்பிவிடுதல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.

தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தமிழ்நாடு அரசு சார்பில் முனெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன, பேரிடர் மீட்பு படையினர் பல மாவட்டங்களில் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில்  நேற்று துணை முதல்வர் உதயநிதி நேரடியாக ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் எல்லா மாவட்ட நிர்வாகமும் மழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
மதுரையில் இனி தூசி தொல்லை கொஞ்சம் குறையும்... மாநகராட்சிக்கு புதிய மண் கூட்டும் இயந்திரம் வந்திருக்கு !
மதுரையில் இனி தூசி தொல்லை கொஞ்சம் குறையும்... மாநகராட்சிக்கு புதிய மண் கூட்டும் இயந்திரம் வந்திருக்கு !
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
விளாத்திகுளம் சிறுமி கொலை: துரத்தப்பட்ட கனிமொழி? அதிமுக கொந்தளிப்பு! திமுவுக்கு எதிராக போராட்டம்!
விளாத்திகுளம் சிறுமி கொலை: துரத்தப்பட்ட கனிமொழி? அதிமுக கொந்தளிப்பு! திமுவுக்கு எதிராக போராட்டம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget