மேலும் அறிய

Rajbhavan Expenditure : ஆளுநர் மாளிகை செலவு; உண்மைக்கு மாறான தகவல் - ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம்

Rajbhavan Expenditure : ஆளுநர் மாளிகையில் செலவு குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பிடிஆர் கூறியுள்ளார் என ஆளுநர் ரவி விளக்கமளித்தார். 

ஆளுநர் மாளிகையில் செலவு குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பிடிஆர் கூறியுள்ளார் என ஆளுநர் ரவி விளக்கமளித்தார். 

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் ஆளுநர் மாளிகையின் செலவு குறித்தும், அது தவறாக பயன்படுத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆளுநர் ரவி, “அவர்கள் நாகரீகமாகவோ அல்லது ஒழுக்கமானவர்களாகவோ இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தமிழக மக்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் சொன்னது அப்பட்டமான பொய். முதலாவதாக, நிதிக் குறியீட்டின்படி ஆளுநரின் விருப்பமான மானியம் சிறு தொண்டு நிறுவனங்களுக்கும், ஏழைகளுக்கு வழங்கலாம் என்று இருக்கிறது. 2000 ஆம் ஆண்டிலேயே நிதிக் குறியீட்டிலிருந்து 'குறைந்த' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அதாவது வெளியிடப்படும் பட்ஜெட்டுக்குள் வரம்பு இருக்க முடியாது மற்றும் இருக்கக்கூடாது என்று அது கூறுகிறது. அதாவது ஆளுநரின் விருப்பத்தை மட்டுப்படுத்தப்படக்கூடாது.

இரண்டாவதாக, நிதியமைச்சர் அக்ஷய பாத்ராவைக் குறிப்பிட்டார். 2000 ஆம் ஆண்டில், ஏழை மாணவர்களின் பெரும் கல்வி இடைநிற்றலைப் பற்றி கவலைப்பட்ட அப்போதைய ஆளுநர், ஆரோக்கியமான இலவச உணவை வழங்க விரும்பினார், இது இடைநிற்றலைக் குறைக்கும் என்றும் நம்பினார். அக்ஷய பத்ரா மிகவும் பிரபலமான ஒரு NGO ஆகும். அவர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டு மில்லியன் ஏழைகளுக்கு இலவச உணவை வழங்குகிறார்கள். அக்ஷய பாத்ரா GCC பள்ளிகளுக்கு இலவச உணவை வழங்க முன்வந்தது. அவர்கள் விரும்பியதெல்லாம் சுகாதாரமான சமையலறை மட்டுமே. அந்த சமையலறையின் மதிப்பீடு சுமார் 5 கோடி ரூபாய். இந்த தொகையை ஆளுநர் தனது விருப்ப மானியத்தில் இருந்து அனுமதித்து, தவணையாக விடுவித்து, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அவர்கள் இது தொடர்பாக கேஸ் மற்றும் தண்ணீர் இணைப்புகளுக்காக மாநகராட்சியை நாடினர். ஆனால், மாநகராட்சி அதை ஏற்படுத்தி தரவில்லை. 

கடந்த 16 மாதங்களாக அக்ஷய பாத்ரா நிறுவனம் முதலமைச்சர் அலுவலகம் சென்று வருகிறது. அவர்களால் முதலமைச்சர் நியமனத்தை பெற முடியவில்லை. இது தொடர்பாக அனைத்து ஆவணங்களும், வங்கி பரிவர்த்தனைகள் ஆதாரங்களாக உள்ளது. 

ஆளுநர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து தேநீர் விருந்து நடத்துகிறார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில், ராஜ் பவனில் தேனீர் விருந்து நடத்துவது நமது சுதந்திரத்தின் கொண்டாட்டமாகும், இது நாடு முழுவதும் நடக்கும். முன்பு இது அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும். அதை நான் மாற்றினேன். அதிகாரிகள் எண்ணிக்கை சிறிது குறைக்கப்பட்டு, விவசாயிகள், இளைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓக்கள், மாற்றுத்திறனாளிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், பாரம்பரிய கலைஞர்கள் என அனைத்துப் பிரிவினரையும் கொண்ட பரந்த அளவிலான மக்களை கலந்துகொள்ள வைத்திருக்கிறேன். 'அட் ஹோம்' நிகழ்ச்சியில் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்து என்று கூறுவது தமிழக மக்களை அவமதிப்பதாகவும், தேசிய தினத்தை கொண்டாட்டத்தை அவமதிப்பதாக உள்ளது. 

 சிவில் சர்வீஸ் தேர்வாளர்களுக்கு பணம் செலவழிக்கப்படுவதாக தெரிவித்தார்கள். நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது, தமிழகம்தான் அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்களைக் கொண்டிருந்தது. இன்று நாம் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறோம். அதனால், ஏழை மாணவர்கள் 250 முதல் 300 பேர் வரை படிக்க வைக்க ஆரம்பித்தேன். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறேன், எப்படி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டுகிறேன். நான் அவர்களை பசியுடன் திருப்பி அனுப்ப முடியாது. நான் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இதைப் பற்றி அரசாங்கம் ஏன் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த பொய்களை எல்லாம் நிதியமைச்சர் சொன்னார்.

 ஊட்டியில் ஆளுநர் தேநீர் விருந்து நடத்தி சில லட்ச ரூபாய் செலவு செய்ததாக பிடிஆர் குற்றம் சாட்டினார். இந்த டீ பார்ட்டி என்ன தெரியுமா...? இந்த பழங்குடி மக்கள் அனைவரும் நீலகிரியின் பழங்குடியினர். அவர்கள் அழைக்கப்பட்டனர், அவர்கள் என் விருந்தினர்கள். மாலை முழுவதும் அவர்களுடன் செவிமடுத்தோம். ஆஸ்கார் விருது பெறுவதற்கு முன்பே, அவர்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கு முன்பே அந்த தேநீர் விருந்தில் பொம்மன் மற்றும் பெள்ளி இருந்தனர். எனக்கும்,  எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் உணவுக் கட்டணத்தைச் செலுத்துகிறேன். ஆளுநரின் சலுகைகளின் கீழ், ஆளுநர் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும், நான் உணவுக் கட்டணத்தை தவறாமல் செலுத்துகிறேன். அவர்களால் என்னை நோக்கி விரல் உயர்த்தி குறை கூற முடியாது”என தெரிவித்தார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Embed widget