மேலும் அறிய

Schools Leave : தமிழ்நாட்டில் கனமழையால் எந்தெந்த மாவட்டங்களில், இன்று விடுமுறை தெரியுமா..?

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக சென்னை, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கும், காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் சில பகுதிகளுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஓரிரு தினங்களாக மாநிலம் முழுவதும் மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ட்டது. மேலும், பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. தற்போது வரை பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதாலும், இன்று முழுவதும் பரவலாக மழை வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Schools Leave : தமிழ்நாட்டில் கனமழையால் எந்தெந்த மாவட்டங்களில், இன்று விடுமுறை தெரியுமா..?

கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏ.ஆர்.ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் தலைநகரான சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Schools Leave : தமிழ்நாட்டில் கனமழையால் எந்தெந்த மாவட்டங்களில், இன்று விடுமுறை தெரியுமா..?

மேற்கண்ட மாவட்டங்கள் மட்டுமின்றி கனமழை காரணமாக விழுப்புரம், அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நேற்றுதான் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில், சில மாவட்டங்களில் இன்னும் பள்ளிகளை திறக்க முடியாத அளவிற்கு மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்று முதல் மழை அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் மழையின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இதன்காரணமாக, நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், மயிலாப்பூர், தி.நகர், ராயபுரம், ராயபேட்டை, பாரிமுனை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் கடுமையாக தேங்கியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு  வழங்க கோரிக்கை!
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை!
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Amarnath Ramakrishna: கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
Embed widget