![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Rajendra Balaji : விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராஜேந்திர பாலாஜியிடம் விடியவிடிய விசாரணை
விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின்னர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
![Rajendra Balaji : விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராஜேந்திர பாலாஜியிடம் விடியவிடிய விசாரணை Former Minister Rajendra balaji produced before the Srivilliputhur Principal District Court Virudhunagar Rajendra Balaji : விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராஜேந்திர பாலாஜியிடம் விடியவிடிய விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/06/a00b3d8a338df659912a060bb61a7c08_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நேற்று கர்நாடக மாநிலம் ஹாசனில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். மதுரை சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகிய இருவரும் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
'முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சேஸ் செய்து தூக்கிய போலீஸ்’ கர்நாடாகவில் கைது செய்யப்பட்டார்..!#Rajendrabalaji | pic.twitter.com/Q48pVRKl6R
— Raja Shanmugasundaram (@SRajaJourno) January 5, 2022
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையொட்டி தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த 20 நாட்களாக தேடுதல் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று கர்நாடகாவில் வைத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின்னர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு ராஜேந்திரபாலாஜி அழைத்து வரப்பட உள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மற்றும் பிற பரிசோதனைகள் செய்யப்பட்டு
— துணைவேந்தன்.ச. (@SThunaiventhan) January 6, 2022
மீண்டும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு ராஜேந்திரபாலாஜியை மீண்டும் அழைத்து வந்தனர். @GunasekaranMu @Mdu_CityPolice @imanojprabakar pic.twitter.com/rSOOenTN9B
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், " யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டும். ஆவினில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் அதிமுக., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான். பொறுத்திருங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)