மேலும் அறிய

Veda Nilayam: ஜெயலலிதாவின் வேதா இல்லம் தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு..

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் அவருடை அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் அவருடை அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த குடியிருப்பான வேதா நிலையம் இல்லத்தினை நினைவுச் சின்னமாக மாற்றப்படும் என்று முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது. இது தொடர்பான அரசாணை வெளியிட்டதோடு, இந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தியது. இதன் மூலம், ஜெயலலிதா குடியிருப்பு அரசின் சொத்தாகியது. வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் நகர  நீதிமன்றத்தைநாடி, தங்களுக்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 

இந்த நடவடிக்கையை எதிர்த்து, ஜெயலலிதாவின்  அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சேஷசாயி விசாரித்து வந்தார். தங்கள் மனுவில், "காலஞ்சென்ற ஜெயலலிதா என்ற தனிநபர் வாழ்ந்த குடியிருப்பை அரசுடமையாக்க அரசுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். குடியிருப்பை, நினைவில்லமாக மாற்றவும் தடை விதிக்க வேண்டும். 


Veda Nilayam: ஜெயலலிதாவின் வேதா இல்லம் தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு..

மேலும், ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கில், தங்களை நேரடி வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், தங்களிடம் கலந்தாலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர நீதிமன்றத்தில்  வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு சட்டத்திற்கு எதிரானது" என்று தெரிவித்திருந்தனர்.  வழக்கின் அனைத்து வாதங்களையும் விசாரித்த நீதிபதி சேஷசாயி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை(Vedha Illam) அரசுடைமையாக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம், மூன்று வாரங்களில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரிடம் வேதா நிலையத்தை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.  

அதன்படி தற்போது வேதா இல்லத்தை தீபா தீபக்கிடம் அரசு ஒப்படைத்துள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் சாவியை ஆட்சியர் விஜயராணி ஒப்படைத்தார். சாவி ஒப்படைக்கப்பட்டதையடுத்து வேதா நிலையத்தில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தீபா. மேலும் இதுகுறித்து அரசு மேல்முறையீடு செய்தாலும் சந்திக்க தயார் என தீபா தெரிவித்துள்ளார். 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை! எடப்பாடி சொன்னால் பதவி விலக தயார்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி
RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை! எடப்பாடி சொன்னால் பதவி விலக தயார்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி
ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
BJP
BJP "நிதி வேண்டும் என்றால் நீதிமன்றம் செல்லட்டும்" திமுகவுக்கு இராம ஸ்ரீனிவாசன் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை! எடப்பாடி சொன்னால் பதவி விலக தயார்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி
RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை! எடப்பாடி சொன்னால் பதவி விலக தயார்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி
ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
BJP
BJP "நிதி வேண்டும் என்றால் நீதிமன்றம் செல்லட்டும்" திமுகவுக்கு இராம ஸ்ரீனிவாசன் பதிலடி
OPS Vs RB Udharakumar: ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..!  பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..! பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
Tesla India Hiring: நான் வந்துட்டேன்..! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு - டெஸ்லா EV தொழிற்சாலை, சென்னைக்கு வருமா?
Tesla India Hiring: நான் வந்துட்டேன்..! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு - டெஸ்லா EV தொழிற்சாலை, சென்னைக்கு வருமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.