மேலும் அறிய

FactCheck | `மசூதிக்கு அடியில் கிடைத்ததா நந்தி சிலை?’ - வைரல் புகைப்படம் குறித்த உண்மை இதுதான்..!

நாமக்கல் மாவட்டத்தில் கோயில் வளாகம் ஒன்றில் நந்தி சிலை ஒன்று தோண்டப்படும் போது, மண்ணுக்கு அடியில் கிடைத்ததை, மசூதி அடியில் தோண்டியபோது கிடைத்ததாக, வடஇந்தியாவில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் கோயில் வளாகம் ஒன்றில் நந்தி சிலை ஒன்று தோண்டப்படும்போது, மண்ணுக்கு அடியில் கிடைத்ததை, மசூதி ஒன்றின் அடியில் தோண்டியபோது கிடைத்ததாக, வட இந்தியாவில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. `ஒவ்வொரு மசூதிக்கும் அடியில் புதைக்கப்பட்டிருக்கும் ரகசியம்’ என்று இந்தி மொழியில் எழுதப்பட்டிருக்கும் தொடருடன் இந்தப் படம் வைரலாகி வருகிறது. 

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் கோயிலின் அடியில் தோண்டியபோது, இந்த நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இது மசூதியின் அடியில் கிடைத்தது என்று பரப்பப்படுவது தவறான தகவல். நாமக்கல் மாவட்டத்தின் அரியூர் கிராமத்தின் செல்லாண்டியம்மன் கோயிலில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலைச் சுற்றி, சுற்றுச்சுவர் அமைப்பதற்காகத் தோண்டிய போது, மண்ணில் புதைந்த நிலையில் சேதமான நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

FactCheck | `மசூதிக்கு அடியில் கிடைத்ததா நந்தி சிலை?’ - வைரல் புகைப்படம் குறித்த உண்மை இதுதான்..!

இதுகுறித்த தகவல்கள் பல்வேறு நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகள் முதலானவற்றில் இடம்பெற்றுள்ளன.  நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அரியூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பாண்டீஸ்வரர் கோயில் பிரபலமானது. இந்தக் கோயிலுக்கு அருகில் செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இந்தப் பகுதி பாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, இதே பகுதியில் வெள்ளைக் கற்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலையும், இதே போன்ற நந்தி சிலை ஒன்று அளவில் பெரியதாகவும், சிதிலமடைந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவற்றை ஆய்வுக்காக சேலம் தொல்லியல் துறையினர் எடுத்துச்சென்று, சேலம் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். 

கோயில் புனரமைப்புக்காகத் தோண்டியபோது, நந்தி சிலை கிடைத்தது அங்கு பணியில் இருந்தோரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இதுகுறித்து பணியாளர்கள் கோயில் நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தவுடன், வருவாய்த்துறையினர் அப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்டு, நந்தி சிலையை எடுத்துப் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதனைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காகத் தொல்லியல் துறையினரிடம் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் வருவாய்த்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FactCheck | `மசூதிக்கு அடியில் கிடைத்ததா நந்தி சிலை?’ - வைரல் புகைப்படம் குறித்த உண்மை இதுதான்..!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் போது, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவசேனா அரசின் உத்தரவின் பேரில், மும்பை மாநகராட்சி நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது. கங்கனா ரனாவத்தின் கட்டிடம் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. அப்போது இதேபோல, மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள கத்ரா பஜார் பகுதியின் மசூதி மும்பை பாந்த்ரா பகுதியில் இருப்பதாகவும், அதனை சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்ட்ரா முதல்வருமான உத்தவ் தாக்கரே இடிக்க வேண்டும் எனவும் சவால் விடப்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

அதனைப்போல, பல போலியான தகவல்கள் இந்திய மக்களிடையே மத உணர்வைத் தூண்டுவதற்காகப் பரப்பப்பட்டு வருகின்றன. நாமக்கல்லில் தோண்டி எடுக்கப்பட்ட நந்தி சிலை குறித்த பொய்யான தகவலும் அப்படியான ஒன்றே. 

வாட்சப்பில், சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்படுவது அனைத்தும் உண்மையல்ல. உண்மை தகவல் என தெரியாமல் அதை மற்றவர்களுக்கு பரப்புவது சமூகத்துக்கு கேடு விளைவிக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.