மேலும் அறிய

EPS Tweet: திருச்சியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொள்ளை சம்பவம்.. திமுக அரசை விளாசும் ஈபிஎஸ்

திருச்சியில் பட்டப்பகலில் பேராசிரியையை தாக்கி நடந்த கொள்ளை சம்பவத்திற்காக, தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

திருச்சியில் பட்டப்பகலில் பேராசிரியையை தாக்கி நடந்த கொள்ளை சம்பவத்திற்காக, தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி டிவீட்:

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்று,பட்டபகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது, யார்க்கும்-எதற்கும் அஞ்சோம் எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது,  ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தது போல் தமிழ்நாட்டில் எது நடந்தாலும், சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்து போனாலும், விளம்பர அரசியல் செய்யும் விடியா அரசின் முதல்வரின் காதுகளுக்கு மட்டும் அது எட்டுவதே இல்லை என்பது வேதனைக்குரியது” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, சம்பவம் தொடர்பான வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

பட்டப்பகலில் நடந்த கொள்ளை:

திருச்சி வ.உ.சி. சாலை கேலக்சி டவர் பகுதியில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மனைவி சீதாலட்சுமி. அவருக்கு வயது 53. பேராசிரியையான இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.சி. துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.  மாலை நேரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் தனது இருசக்கர வாகனத்தை  நிறுத்திவிட்டு அங்குள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி செல்வது சீதாலட்சுமியின் வழக்கம். 

அதேபோல் கடந்த 12-ந்தேதி மாலை அவர் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை எடுக்க வந்துள்ளார். அப்போது, அங்கு இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த மரக்கட்டையால் சீதாலட்சுமியின் தலையில் தாக்கியதில், அவர் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே, அந்த நபர் பேராசிரியையின் கால்களை பிடித்து சாலையிலேயே தர, தரவென இழுத்துச்சென்று அருகில் இருந்த சுவற்றில் சாய்த்து படுக்க வைத்துவிட்டு அவரது வாகனத்தையும், செல்போனையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார். இதனிடையே சுயநினைவிற்கு வந்த  பேராசிரியை சீதாலட்சுமி சம்பவம் தொடர்பாக கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார்.

குற்றவாளி கைது:

அதன்பேரில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் பேராசிரியையை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டது தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமனேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பது உறுதியானது. மேலும், குடிபோதை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான செந்தில்குமார், தற்போது திருச்சி காந்திமார்க்கெட் தாராநல்லூர் கீரைக்கடை பஜார் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தேடி வந்தனர்.

இடதுகால் முறிவு

இந்நிலையில், செந்தில்குமார் தாராநல்லூர் பகுதியில் செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று செந்தில்குமாரை பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும், பேராசிரியையிடம் கொள்ளையடித்த ஸ்கூட்டரில் அதிவேகமாக சென்றார். அப்போது, சாலையின் மையத்தடுப்பில் மோதி ஸ்கூட்டருடன் அவர் கீழே விழுந்தார். இதில் அவருடைய இடதுகால் உடைந்தது. இதைத்தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் செந்தில்குமாரிடம் இருந்து சீதாலட்சுமியின் ஸ்கூட்டர், செல்போனை போலீசார் மீட்டனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?
கொளுத்திப் போட்ட டிரம்ப்
”சென்னைக்கு வாங்க வருண்”ஸ்டாலின் போடும் MASTERPLAN! டார்கெட் தவெக விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
Thailand Cambodia Dispute: மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 25-ம் தேதி மின்சார துண்டிப்பு செய்யப்பட உள்ள இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
சென்னையில ஜூலை 25-ம் தேதி மின்சார துண்டிப்பு செய்யப்பட உள்ள இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
Embed widget