மேலும் அறிய

EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS

சென்னையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள இபிஎஸ், ஆட்சியாளர்கள் காப்பாற்றுவார்கள் என்பதால் பல 'SIR' கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துவதாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் 3 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இச்சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும், வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பள்ளி மாணவிகள் மீது அரங்கேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை

சென்னையை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காணவில்லை என, திரு.வி.க நகர் போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, சிறுமியை தேடிய போலீசார், செல்போன் சிக்னலை வைத்து, அவர் வீனஸ் நகரில் இருப்பதை உறுதி செய்து, அங்கு சென்றனர். அப்போது, அந்த சிறுமி தனது காதலனுடன் தங்கியிருந்தது தெரியவந்தது. அதோடு, மேலும் 2 சிறுமிகளும் அவரவர்களது காதலர்களோட தங்கியிருந்ததையும் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, சிறுமிகளை மீட்ட போலீசார், அவர்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, 3 காதலர்களையும் கைது செய்தனர். அதில், கைதான கரிமுல்லா என்பவர் மீது ஏற்கனவே 11 வழக்குகளும், அபிஷேக் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் மீதும் தலா 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவியதாக மேலும் மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரசை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி ட்வீட்

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த 3 சிறுமிகளை, 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும், உடந்தையாக இருந்தவர்கள் மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது, அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தால்தான் குற்றம் செய்பவர்கள் அஞ்சுவார்கள் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும் என கூறியுள்ளார்.

அதோடு, 'SIR'கள் போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், தமிழ்நாட்டில் பல 'SIR'கள் பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாகவும், அதை கண்டிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்த வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம்  திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Embed widget