மேலும் அறிய

ரயில் மோதி மூளைச்சாவு அடைந்த இன்ஜினியர் உடல் உறுப்புகள் தானம்

12 ஆம் தேதி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ஓட்டுனர் உரிமம் பெற்ற அவர் அன்று மாலை ஊருக்குச் செல்வதற்காக தனது துணிமணிகளை பையில் எடுத்து வைத்து தயாரானார்.

கரூர் மகாதானபுரம் அருகே ரயில் மோதியதில் மூளைச்சாவு அடைந்த இன்ஜினியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மகாதானபுரம் கம்மாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவருடைய மனைவி விஜயா (50). இவர்களுக்கு நவீன் குமார் (30), சுபாஷ் (23) ஆகிய இரு மகன்களும், ரம்யா (25) என்ற மகளும் உண்டு. ராஜேந்திரனும், விஜயாவும் கோவை பீளமேட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறார்கள்.


ரயில் மோதி மூளைச்சாவு அடைந்த இன்ஜினியர் உடல் உறுப்புகள் தானம்

டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள சுபாஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். கடந்த 10ம் தேதி ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்காக, கம்மாநல்லூருக்கு சுபாஷ் வந்திருந்தார். கடந்த 12ஆம் தேதி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ஓட்டுனர் உரிமம் பெற்ற அவர் அன்று மாலை ஊருக்குச் செல்வதற்காக தனது துணிமணிகளை பையில் எடுத்து வைத்து தயாரானார்.


ரயில் மோதி மூளைச்சாவு அடைந்த இன்ஜினியர் உடல் உறுப்புகள் தானம்

பின்னர், அவர் அருகிலுள்ள ரயில் தண்டவாள பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற பயணிகள் சிறப்பு ரயில், சுபாஷ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நள்ளிரவில் மூளைச் சாவு அடைந்தார். இதைக் கேட்டு கதறி அழுத சுபாஷின் பெற்றோர் மனதை தேற்றிக்கொண்டு, தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.


ரயில் மோதி மூளைச்சாவு அடைந்த இன்ஜினியர் உடல் உறுப்புகள் தானம்

இதுபற்றி டாக்டர்கள், மருத்துவமனை டீன் நேருக்கு தகவல் கொடுத்தனர். அவர் முறைப்படி உடல், உறுப்பு தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். இதை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவருடைய இதயம் நுரையீரல் 2 சிறுநீரகங்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பின்னர் அவை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இதயம், நுரையீரல் ஆகியவை திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நோயாளிகளுக்கு அவை பொருத்தப்பட்டது.


ரயில் மோதி மூளைச்சாவு அடைந்த இன்ஜினியர் உடல் உறுப்புகள் தானம்

2 சிறுநீரகங்களில் ஒன்று மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. சுபாஷ் இறந்தாலும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ததால், 4 பேருக்கு மறுவாழ்வு அளித்து இருப்பதாக டாக்டர்கள் கூறினர். பின்னர் சுபாஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கரூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
June 26 Car Sale: ஒரு வழியா..! டாடாவின் கம்பேக், மஹிந்த்ரா ஷாக், ஹுண்டாய்க்கு என்ன தான் ஆச்சு? மாருதி காட்டில் மழை
ஒரு வழியா..! டாடாவின் கம்பேக், மஹிந்த்ரா ஷாக், ஹுண்டாய்க்கு என்ன தான் ஆச்சு? மாருதி காட்டில் மழை
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
Embed widget