ABP Exclusive: வருமானத்துக்கு அதிகமாக சொத்து - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றப்பத்திரிகை பதிவு!
குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டதால் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது. 2001 - 2006 காலகட்டத்தில் அதிமுக தலைமையிலான அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 90 இலட்சம் அளவிற்கு சொத்து சேர்த்த புகாரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டதால் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















