மேலும் அறிய

கரூரில் 284 பயனாளிகளுக்கு அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக 284 பயனாளிகளுக்கு அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணைகளையும் பயனாளிகளுக்கு  தாமாக வீடு கட்டிக்கொள்ள பணிஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விடவாரியத்தின் அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணை. 

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக 284 பயனாளிகளுக்கு அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணைகளையும் 20 பயனாளிகளுக்கு  தாமாக வீடு கட்டிக்கொள்ள பணிஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
கரூரில்  284 பயனாளிகளுக்கு அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் 

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி காட்சிவாயிலாக, கரூர் மாவட்டம் கரூர் வட்டம் புலியூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூபாய் 2491.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 400 சதுரடி பரப்பளவு கொண்ட 288 அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று (07.12.2022) திறந்து வைத்தார்கள். அதையொட்டி கரூர் வட்டம் புலியூர் பேரூராட்சி பகுதியில் இன்று (07.12.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக புலியூர் திட்டப்பகுதியில் 283 பயனாளிகளுக்கும், சாணப்பிரட்டி திட்டப்பகுதியில் 1 பயனாளிகளுக்கும் அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணைகளையும் 20 பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டிக்கொள்ள பணிஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  த.பிரபுசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலை வகித்தார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

கரூரில்  284 பயனாளிகளுக்கு அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்  

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட, புலியூர் திட்டப்பகுதியில் 283 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 8.65 இலட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணையும், சணப்பிரட்டி திட்டப்பகுதியில் 01 பயனாளிகளுக்கு ரூபாய் 18.35 இலட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணையம் மற்றும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் - பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 20 நகர்ப்புர பயனாளிகளுக்கு ரூ. 2.10 இலட்சம் மானியத்துடன் வீடு ஈட்டுவதற்கு பணி ஆணையும் வழங்கப்பட்டது.

 மேலும், இத்திட்டத்தில் பயன் பெற்ற பயனாளிகள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் புதிதாக மானியத்துடன் வீடு கட்டிக்கொள்ள பயனாளிகள் முறையாக வீடுகளை கட்டி பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.

கரூரில்  284 பயனாளிகளுக்கு அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்லியாகத், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சைபுதீன், கரூர் வருவாய் கோட்டாட்சியர்.செல்வி.ரூபினா,  தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி நிர்வாகப்பொறியாளர் திரு. தமிழரசு, உதவி பொறியாளர் திரு. பாலாஜி, புலியூர் பேரூராட்சி தலைவர் திருமதி.புவனேஸ்வரி, பயனாளிகள் கரூர் வட்டாட்சியர் திரு.சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான  கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது. 

  2022  -  ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது  ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது   வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது தலா ரூ.20000/- ரூ.10000/- மற்றும் ரூ.5000/- தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் ( ஆயுதப்படை வீரர்கள், காவல் தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள்  சமுதாய  நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக  நிகழும்  பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர். 
                 

மேலும் இவ்விருதானது ஒரு  சாதி, இனம் வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன  வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்  போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. 
 மேற்காணும் விருதிற்கான  விண்ணப்பம் மற்றும் முக்கிய  விவரங்களை தமிழ்நாடு  விளையாட்டு  ஆணைய  இணையதள   முகவரியான  htpp://awards.tn.gov.in  மற்றும் www.sdat.tn.gov.in  மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை பெற்று தலைமையகம் அனுப்பிட வேண்டியுள்ளதால், விண்ணப்பங்களை 13.12.2022 ஆம் தேதிக்குள் கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவகத்தில் மாலை 5.30 மணிக்குள் சமர்பித்திட வேண்டுமாறு கரூர் மாவட்ட  ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget