மேலும் அறிய

பன்னீர் திராட்சை... கண்ணீருடன் கால்நடைகளுக்கு இரையான சோகம்!

500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பல லட்சம் டன் திராட்சை பழங்கள் , மழை காரணமாக நாசமாகி உள்ளன.

திண்டுக்கல் அருகே தொடர் மழையின் காரணமாக 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பன்னீர்  திராட்சை பழங்கள்  அழுகியதால்   விவசாயிகள் வேதனை. மாடுகளுக்கு திராட்சைப் பழங்களை கொடுக்கும் அவலம். பல லட்சம் டன் திராட்சை அழிந்து  போனதால் அரசு இலப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை. 
 

பன்னீர் திராட்சை... கண்ணீருடன் கால்நடைகளுக்கு இரையான சோகம்!
திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது. சிறு குறு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமாக பிரதான தொழிலாக திராட்சை விவசாயத்தை செய்து வருகிறார்கள். கடந்த காலங்களில் ஒரு கிலோ திராட்சை 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூபாய் 80 க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் இந்த 80  ரூபாய் விலைக்கு விற்பதற்கு தங்கள் திராட்சை பழங்களை அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகளுக்கு தொடர்மழை பேரதிர்ச்சியை தந்தது.
மழையின் காரணமாக பழங்கள்  வெடித்து அழுகி கீழே  கொட்டுகின்றன. மற்ற பகுதிகளில் விளையும் திராட்சை யோடு இந்தப் பகுதி திராட்சை ஒப்பிடும்போது மிகவும் தரமானது. 10 நாட்கள் வரை கெடாது, உதிரவும் உதிராது. ஆனால் மழை காரணமாக கடுமையான சேதாரத்தை திராட்சை விவசாயிகள் சந்தித்துள்ளனர். ஒரு ஏக்கர் முதல்  இரண்டு ஏக்கர் நிலத்தில் சிறு குறு விவசாயிகள் பயிரிட்டு வந்த திராட்சை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நல்ல மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதற்காக விவசாயிகள் தங்க நகைகளை கிராமக் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பணத்தைப் பெற்று உரம் பூச்சி மருந்து தெளித்து வளர்த்த இந்த திராட்சைப் பழங்கள், அழிவுக்கு உள்ளாகும் போது கண்ணீர் விட்டு கதறும் நிலைதான் உள்ளது.

பன்னீர் திராட்சை... கண்ணீருடன் கால்நடைகளுக்கு இரையான சோகம்!
அறுவடைக்கு வந்த வியாபாரிகள் பழங்களின் தரத்தை பார்த்து வாங்காமல் திரும்பி செல்லும் பொழுது விவசாயிகளின் முகங்களில் சோகம் அப்பிக் கொள்கிறது. இனி இந்த திராட்சைகளை அறுவடை செய்ய முடியாது என்று நொந்துபோன விவசாயிகள், வேதனையோடு தங்கள் மாடுகளுக்கு தீவனமாக வழங்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம் ஆட்சியர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டும், வேளாண் அதிகாரிகள் ஆறுதலுக்கு கூட வருவதில்லை என்று வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள்.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசு தரப்பில் எந்த உதவியும் செய்வதில்லை. கிராம அதிகாரிகள் தங்கள் கிராம கணக்குகளில் இந்த சேதாரம் குறித்து பதிவு செய்வதுமில்லை . இதனால் இப்பகுதி விவசாயிகள் அரசாங்கத்தை நம்பாமல் முழு நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு ஏக்கரில் 5 ஆயிரம் டன் திராட்சை மகசூல் கிடைக்கும், அதன் மூலம் பல லட்ச ரூபாய் வருமானம் ஈட்டும் நிலை இருந்தது. ஆனால் இப்போது முதலுக்கே மோசம் வந்தநிலைதான். இந்தப் பகுதியில் உள்ள 500 ஏக்கரில் பல லட்சம் டன் திராட்சை பழங்கள் மழை காரணமாக நாசமாகி உள்ளன.

பன்னீர் திராட்சை... கண்ணீருடன் கால்நடைகளுக்கு இரையான சோகம்!
விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .இந்தப் பகுதி திராட்சை  விவசாயிகளை வேளாண் துறையினர் நேரடியாக சென்று பார்வையிட வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட  இப்பகுதி திராட்சை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். அல்லது திராட்சை விவசாயத்திற்காக வைக்கப்பட்ட கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
 
மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு...
 
 

தலைப்பு செய்திகள்

அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
பாவம் போக்கி வாழ்வளிக்கும்... மனக்குழப்பம் தீர்க்கும், கடன் சுமை தீர்த்து அமைதி தரும் பாபநாசம் சிவஸ்தலம்
பாவம் போக்கி வாழ்வளிக்கும்... மனக்குழப்பம் தீர்க்கும், கடன் சுமை தீர்த்து அமைதி தரும் பாபநாசம் சிவஸ்தலம்
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் ரத்து ; மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிரடி ஏற்பாடு !!
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் ரத்து ; மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிரடி ஏற்பாடு !!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
Tata Sierra EV on EMI: டாடா சியரா EV வாங்க உங்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கணும் தெரியுமா.? மாசம் EMI எவ்ளோ.? முழு விவரம்
டாடா சியரா EV வாங்க உங்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கணும் தெரியுமா.? மாசம் EMI எவ்ளோ.? முழு விவரம்
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
Embed widget