மேலும் அறிய

பன்னீர் திராட்சை... கண்ணீருடன் கால்நடைகளுக்கு இரையான சோகம்!

500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பல லட்சம் டன் திராட்சை பழங்கள் , மழை காரணமாக நாசமாகி உள்ளன.

திண்டுக்கல் அருகே தொடர் மழையின் காரணமாக 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பன்னீர்  திராட்சை பழங்கள்  அழுகியதால்   விவசாயிகள் வேதனை. மாடுகளுக்கு திராட்சைப் பழங்களை கொடுக்கும் அவலம். பல லட்சம் டன் திராட்சை அழிந்து  போனதால் அரசு இலப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை. 
 

பன்னீர் திராட்சை... கண்ணீருடன் கால்நடைகளுக்கு இரையான சோகம்!
திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது. சிறு குறு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமாக பிரதான தொழிலாக திராட்சை விவசாயத்தை செய்து வருகிறார்கள். கடந்த காலங்களில் ஒரு கிலோ திராட்சை 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூபாய் 80 க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் இந்த 80  ரூபாய் விலைக்கு விற்பதற்கு தங்கள் திராட்சை பழங்களை அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகளுக்கு தொடர்மழை பேரதிர்ச்சியை தந்தது.
மழையின் காரணமாக பழங்கள்  வெடித்து அழுகி கீழே  கொட்டுகின்றன. மற்ற பகுதிகளில் விளையும் திராட்சை யோடு இந்தப் பகுதி திராட்சை ஒப்பிடும்போது மிகவும் தரமானது. 10 நாட்கள் வரை கெடாது, உதிரவும் உதிராது. ஆனால் மழை காரணமாக கடுமையான சேதாரத்தை திராட்சை விவசாயிகள் சந்தித்துள்ளனர். ஒரு ஏக்கர் முதல்  இரண்டு ஏக்கர் நிலத்தில் சிறு குறு விவசாயிகள் பயிரிட்டு வந்த திராட்சை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நல்ல மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதற்காக விவசாயிகள் தங்க நகைகளை கிராமக் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பணத்தைப் பெற்று உரம் பூச்சி மருந்து தெளித்து வளர்த்த இந்த திராட்சைப் பழங்கள், அழிவுக்கு உள்ளாகும் போது கண்ணீர் விட்டு கதறும் நிலைதான் உள்ளது.

பன்னீர் திராட்சை... கண்ணீருடன் கால்நடைகளுக்கு இரையான சோகம்!
அறுவடைக்கு வந்த வியாபாரிகள் பழங்களின் தரத்தை பார்த்து வாங்காமல் திரும்பி செல்லும் பொழுது விவசாயிகளின் முகங்களில் சோகம் அப்பிக் கொள்கிறது. இனி இந்த திராட்சைகளை அறுவடை செய்ய முடியாது என்று நொந்துபோன விவசாயிகள், வேதனையோடு தங்கள் மாடுகளுக்கு தீவனமாக வழங்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம் ஆட்சியர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டும், வேளாண் அதிகாரிகள் ஆறுதலுக்கு கூட வருவதில்லை என்று வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள்.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசு தரப்பில் எந்த உதவியும் செய்வதில்லை. கிராம அதிகாரிகள் தங்கள் கிராம கணக்குகளில் இந்த சேதாரம் குறித்து பதிவு செய்வதுமில்லை . இதனால் இப்பகுதி விவசாயிகள் அரசாங்கத்தை நம்பாமல் முழு நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு ஏக்கரில் 5 ஆயிரம் டன் திராட்சை மகசூல் கிடைக்கும், அதன் மூலம் பல லட்ச ரூபாய் வருமானம் ஈட்டும் நிலை இருந்தது. ஆனால் இப்போது முதலுக்கே மோசம் வந்தநிலைதான். இந்தப் பகுதியில் உள்ள 500 ஏக்கரில் பல லட்சம் டன் திராட்சை பழங்கள் மழை காரணமாக நாசமாகி உள்ளன.

பன்னீர் திராட்சை... கண்ணீருடன் கால்நடைகளுக்கு இரையான சோகம்!
விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .இந்தப் பகுதி திராட்சை  விவசாயிகளை வேளாண் துறையினர் நேரடியாக சென்று பார்வையிட வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட  இப்பகுதி திராட்சை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். அல்லது திராட்சை விவசாயத்திற்காக வைக்கப்பட்ட கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
 
மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு...
 
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget