மேலும் அறிய

Madurai Aadheenam Arunagiri: ‛அடுத்த மதுரை ஆதீனம் நான்தான்’ பகீர் அறிக்கை விடுத்த நித்யானந்தா: அப்போ ‛கைலாசா’ கதி என்ன?

அடுத்த ஆதீனம் நித்யானந்தாவா?...அவரது சொந்த நாடான கைலாசாவின் கதியென்ன எனப் பல குழப்பங்களை அவரது ஆதரவாளர்களிடையே இந்த அறிக்கை உருவாக்கியிருக்கிறது

கடந்த சில வருடங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார், மதுரை ஆதீனத்தின்  292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர். அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் சற்று அமைதியானார். அதிமுக- பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றபின் அவரை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசிவிட்டு மதுரை திரும்பினார்.  ஓ.பி.எஸ் தியானத்துக்கு பின் அதிமுக-வுக்குள் ஏற்பட்ட பிளவை அடுத்து யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிக்காமல் பொறுமை காத்து வந்தார். தொடர்ந்து அரசியலில் பெரியளவு ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த திங்கள் அன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை  தற்போது மோசமடைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆதீனம். அவரை கவனித்து வரும் மடத்துப் பணியாளர்களை தவிர்த்து வேறு யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே மதுரை ஆதீனத்தின் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆதினத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அடுத்த ஆதீனம் யார் என்கிற சர்ச்சை உருவாகியுள்ளது.கடந்த இரண்டு தினங்களுக்கு இடையே நித்யானந்தா ஆதீனம் விரைவில் குணமடைய வேண்டும் என விடுத்திருந்த அறிக்கையில்  தன்னை 293வது சன்னிதானம் எனக் குறிப்பிட்டிருந்ததால் இந்த சர்ச்சை உருவாகியிருக்கிறது. 

தனது அறிக்கையில், ‘“ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்" அவர்கள் 1980ம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் குருமஹாசன்னிதானமாக முடி சூட்டப்பட்டார்கள். அன்றிலிருந்து மதுரை மக்களுக்கு ஞானஅறிவியலை வழங்கும் ஆன்மீக மற்றும் மதரீதியான எல்லா கடமைகளும், பொறுப்புகளையும் திறம்பட செய்து நிர்வகித்து வந்தார்கள்.

292வது குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அவர்கள் ஏப்ரல் 27, 2012 அன்று என்னை, 293 குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் என பிரகடனப்படுத்தி, தன் சட்டப்பூர்வ வாரிசாக அறிவித்து முடிசூட்டினார்.

இதன் மூலம் மதுரை ஆதீனம் குருமஹாசன்னிதானத்திற்க்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மிக ரீதியான, மதரீதியான, சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகளும் பெற்று, மதுரை ஆதீனம், கைலாசோன்னத சியாமளா பீடம் சர்வஞ்ஞபீடத்தின் ஆன்மீசு, மத,மற்றும் மொழியியல் சிறப்புகளை புனரமைத்துள்ளேன்.

கைலாசத்தின் நடைமுறை அதிகாரம் பெற்ற ஆன்மீக தூதரகங்கள் ஸ்ரீ மிருதுஞ்சய ஹோமம் மற்றும் பிற, தொடர்புடைய சடங்குகளை, ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் நீண்ட நாட்கள் வாழ்வதற்காக அவருக்கு தியானசிகிச்சை பிரார்த்தனைகளை நடத்த வேண்டும்.

அமைதிக்கான நிமிடங்கள், தியானத்தைப் பயன்படுத்தி உலகளாவிய விழிப்புணர்வை உயர்த்துவதற்காக கைலாசா தலைமையிலான ஒரு மனிதாபிமான முயற்சி, இதுவரை 4.3 பில்லியன் நிமிடங்களை எட்டியுள்ளது. அகண்ட நிர்விகல்ப சமாதி ஞான யாகம் நடத்தவும், அமைதிக்காக அமர்வுகள் நடத்தவும் மற்றும் அவர்களின் நிமிடங்களை அமைதிக்காக வழங்கவும், அவர்களின் குணப்படுத்தும் பிரார்த்தனைகளை அனுப்பவும் கைலாசாவின் இறையாண்மை ஆணையை நான் கட்டளையிடுகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.  

Madurai Aadheenam Arunagiri: ‛அடுத்த மதுரை ஆதீனம் நான்தான்’ பகீர் அறிக்கை விடுத்த நித்யானந்தா: அப்போ ‛கைலாசா’ கதி என்ன?
தனது அறிக்கையில் மதுரை ஆதீனம் குருமஹாசன்னிதானத்திற்க்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மிக ரீதியான, மதரீதியான, சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகளும் தான் பெற்றுள்ளதாக நித்யானந்தா பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளதை அடுத்து தற்போது மதுரை ஆதீனத்தின் அறை பூட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012ல் தற்போதைய ஆதீனத்தால் தனது அடுத்த வாரிசு என அறிவிக்கப்பட்ட நித்யானந்தா பின்னர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு 2016ல் திருநாவுக்கரசு என்பவரை தனது அடுத்த வாரிசாக ஆதீனம் அறிவித்தார். அடுத்த ஆதீனம் நித்யானந்தாவா? கைலாசா என்னும் நாட்டின் கதியென்ன? என பல குழப்பங்களை இந்த அறிக்கை உருவாக்கியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
Embed widget