மேலும் அறிய

‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!

அதிகம் காபி குடிக்கும் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் தெரிவித்தார்.

காபி அல்லது குளம்பி என்பது பலரும் விரும்பி அருந்தும் நீர்ம உணவு அதாவது பானம் என்றும் அழைப்பார்கள். காபி என்னும் செடியில் விளையும் சிவப்புநிற காபி பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து பிறகு அரைத்து பொடி செய்து அதன்பின் நீருடன் சேர்த்து அல்லது சேர்க்காமலும் பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காபி ஆகும். உலகிலேயே அதிகமாக விற்று,வாங்கக்கூடிய நிலத்தின் விலை பொருளாக உள்ள பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காபிதான். உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் ஏறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்படுகின்றது, இன்று ஏறத்தாழ 100 மில்லியன் மக்களின் வாழ்வாதரம்  காபி பயிரை விவசாயம் செய்வது.


‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!

காபிச் செடியில் 100 க்கும் அதிகமான இன வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் இரண்டே இரண்டு வகை செடிகள் மட்டுமே பயிரிடப்பட்டு, நீர்ம உணவுக்குப் பயன்படும் காபியாக உள்ளன. இவ்விரு இனங்களின் அறிவியல் வகைப்பாட்டுப் பெயர்கள் காபியா அராபிக்கா, காபியா கன்னெஃவோரா என்றும் அழக்கப்படுவர். காபி செடியில் 600 பேரினங்களும் 13, 500 இனச்செடிவகைகளும் உள்ளன.


‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி கிராமத்தில் முக்கிய தொழிலாக இருப்பது விவசாயம். குறிப்பாக இந்த கிராமத்தில் காபி வாரிய ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டுவருகிறது, இந்த ஆராய்ச்சி நிலையத்தில்    7வது சர்வதேச காபி தினம் கொண்டப்பட்டது, இந்நிகழ்ச்சியில் காபியின் பயன்பாடுகள் குறித்த அடுத்த தலைமுறையினருக்கு  கொண்டு சேர்க்கும் வகையிலும், காபி விவசாயம் பற்றி மலை கிராம விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!

மேலும் காபி விவசாயத்தில் அரசுகள் வழங்க கூடிய சிறப்பு சலுகைகள் மற்றும் காப்பி விவசாயத்தில் அதிக வருமானம் கிடைப்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டும் ,காபி செடிகள் பராமரிப்பு பற்றி விவசாயிகளுக்கு முழுமையாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் புது வகையை சேர்ந்த  5355 என்ற ரக காபி நாற்றுகளை அறிமுகம் செய்து  150 விவசாயிகளுக்கு இலவசமாக காபி நாற்றுகள்   வழங்கப்பட்டது . இந்த புதிய ரக காபி செடி நோய் தாக்கத்திற்கு எதிராக இருப்பதாகவும் மற்றும் அதிக லாபம் தர கூடிய வகையில் இந்த காபி நாற்று இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது.


‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!

இதனை தொடர்ந்து காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் கருத்தமணி கூறியதில், ‛‛ தினந்தோறும் காபி அருந்துவதனால் உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி ஏற்படுகிறது என்றும் ,ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய் காபி அருந்துவதனால் 20 சதவிகிதம் கட்டுப்படுத்துவதாகவும் காபி தினந்தோறும் அருந்துவதனால் உடல் எடை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிப்பதாகவும், மருத்துவத்துறையிலும் காபி முக்கிய பங்கு வகிப்பதாகவும், தினந்தோறும்  காபி அருந்தும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக ஏற்படவில்லை என்றும், காபி அருந்தாத மக்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் கீழ்மலை சுற்றுவட்டார கிராம விவசாயிகள் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi CM Swearing In: டெல்லி முதல்வராக ரேகா குப்தா, 6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு...
டெல்லி முதல்வராக ரேகா குப்தா, 6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு...
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
Trump Vs Biden: இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi CM Swearing In: டெல்லி முதல்வராக ரேகா குப்தா, 6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு...
டெல்லி முதல்வராக ரேகா குப்தா, 6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு...
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
Trump Vs Biden: இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
IND vs BAN: அர்ஷ்தீப்சிங்கிற்கு கல்தா! பவுலிங்கில் மிரட்டும் இந்தியா! தத்தளிக்கும் நாகின் பாய்ஸ்!
IND vs BAN: அர்ஷ்தீப்சிங்கிற்கு கல்தா! பவுலிங்கில் மிரட்டும் இந்தியா! தத்தளிக்கும் நாகின் பாய்ஸ்!
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
IND vs BAN: மிரட்டும் ரோகித் பாய்ஸ்! இந்தியா - வங்கதேச போட்டியை நேரலையில் எப்படி பார்ப்பது?
IND vs BAN: மிரட்டும் ரோகித் பாய்ஸ்! இந்தியா - வங்கதேச போட்டியை நேரலையில் எப்படி பார்ப்பது?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.