மேலும் அறிய

Crowd Seeking Remdesivir : ரெம்டெசிவிர் மருந்து வாங்க திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை என சுகாதாரத்துறை அறிவுறுத்தல் கொடுத்தாலும் அந்த அறிவுறுத்தல்கள் முழுமையாக இன்னும் மக்களிடையே சென்று சேரவில்லை. அதோடு, தனியார் மருத்துவர்களும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைப்பதால், ரெம்டெசிவிர் தான் கொரோனாவிற்கான மருந்து என எண்ணி உறவினர்கள் அந்த மருந்தை வாங்க மருத்துவமனைகளில் கால் கடுக்க இரவு பகல் பாராது நிற்க வேண்டிய நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது

ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து அல்ல என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தினாலும், அந்த அறிவுறுத்தல் முழுமையாக மக்களிடையே சென்று சேராததால், ரெம்டெசிவிர் ஊசி போட்டால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் பிழைத்துக் கொள்வார் என்று நினைத்தும், கொரோனாவிற்கான மருந்தே ரெம்டெசிவிர்தான் என எண்ணியும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் என மாவட்ட தலைநகரங்களில் காலையில் இருந்து இரவு முதல் கால்கடுக்க நின்று வருகிறார்கள்.


Crowd Seeking Remdesivir : ரெம்டெசிவிர் மருந்து வாங்க திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் ரெம்டெசிவிர் வாங்கி வரவேண்டும் என்று மருந்து சீட்டை எழுதிக்கொடுப்பதால் இது உயிர் காக்கும் மருந்தா அல்லது இல்லையா என்ற குழப்பத்திலேயே பலர் இந்த மருந்தை தேடி அலைந்து வருகின்றனர்.

Crowd Seeking Remdesivir : ரெம்டெசிவிர் மருந்து வாங்க திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

திருச்சியை பொறுத்தவரை பெரியமிளகுப்பாறையில் உள்ள அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியில் கடந்த சனிக்கிழமைதான் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கத் தொடங்கினார். முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட்டது.  சனிக்கிழமை மாலை வந்த பலரை அடுத்த நாள் வரச்சொல்லி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட திருச்சியை சுற்றி இருக்கக் கூடிய மாவட்ட மக்கள் இந்த மருந்தை பெற குவியத் தொடங்கினர்.  ஆனால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மருந்து விற்பனை செய்யப்படவில்லை. இதனால் பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வந்த அனைவரும் கடும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Crowd Seeking Remdesivir : ரெம்டெசிவிர் மருந்து வாங்க திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இந்நிலையில், திங்கள் கிழமை முதல் ஒரு நாளைக்கு 50 பேருக்கு டோக்கன் மூலம் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மருந்தை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் காலையிலேயே வரிசையில் வந்து நின்று வருகின்றனர். இன்றும் கூட 50 நபர்களுக்கான டோக்கன் விநியோகம் முடிந்தாலும், நாளை மருந்தை வாங்குவதற்காக காலை முதலே பெரியமிளகுப்பாறை பகுதியில் நோயாளிகளின் உறவினர்கள் கால் கடுக்க காத்துக் கிடக்க தொடங்கியிருக்கின்றனர்.

Crowd Seeking Remdesivir : ரெம்டெசிவிர் மருந்து வாங்க திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வரும் நிலையில், திருச்சியில் முழுக்க முழுக்க மருத்துவத் துறை இல்லாத, வருவாய் துறையை சேர்ந்த ஊழியர்களே மருந்தை விநியோகம் செய்து வருகின்றனர். அதேபோல், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளுக்கு நேற்று முன் தினம் முதல் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அரசு மருத்துவமனைகளில் எல்லாம் முதுநிலை பயிற்சி மாணவர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறார்கள். 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கும் மருத்துவமனைகளில் ஒரு ஷிப்டுக்கு 10 பேர் வீதம் 4 ஷிப்டுகளாக பயிற்சி மாணவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Crowd Seeking Remdesivir : ரெம்டெசிவிர் மருந்து வாங்க திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இந்த ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே எழுதிக்கொடுக்க வேண்டும், அரசு இதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பித்தும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இல்லாமல் தொடர்ந்து மருந்து வழங்க உத்தரவிடவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
அந்தமானுக்கு ஒரு நீதி.. கர்நாடகாவுக்கு ஒரு நீதியா..? ராகுல் காந்தியைக் கார்னர் செய்த அன்புமணி...!
அந்தமானுக்கு ஒரு நீதி.. கர்நாடகாவுக்கு ஒரு நீதியா..? ராகுல் காந்தியைக் கார்னர் செய்த அன்புமணி...!
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
ஆசிரியர்கள் பிற பணிகளில் ஈடுபட தடை: ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு!
ஆசிரியர்கள் பிற பணிகளில் ஈடுபட தடை: ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு!

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
M.R. Vijayabhaskar Political Journey : செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
Upcoming Smartphones in July: ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
Skoda Kodiaq RS Review: ஸ்போர்ட்ஸ் கார் உணர்வை தரும் ஒரு குடும்ப SUV; ஸ்கோடா கோடியாக் RS எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்
ஸ்போர்ட்ஸ் கார் உணர்வை தரும் ஒரு குடும்ப SUV; ஸ்கோடா கோடியாக் RS எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்
Tata Sierra: நெக்ஸான் ரேட்டில் 21KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் ப்ரீமியம் SUV - ரூ.9600 EMI திட்ட முழு விவரங்கள்
நெக்ஸான் ரேட்டில் 21KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் ப்ரீமியம் SUV - ரூ.9600 EMI திட்ட முழு விவரங்கள்
Embed widget