மேலும் அறிய

Football Player Priya: பிரியா மரண வழக்கு : 2 மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை போலீஸ்..!

Football Player Priya Death: கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் மரணத்துக்கு காரணமான இரண்டு மருத்துவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து காவல் துறை தேடி வருகின்றனர்.

Football Player Priya Death: கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் மரணத்துக்கு காரணமான இரண்டு மருத்துவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து காவல் துறை தேடி வருகின்றனர். 

கால்பந்து வீராங்கனை மரணம் :

கடந்த நவம்பர் 15ஆம் தேதி, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான கால்பந்து வீராங்கனை மாணவி ப்ரியா மரணம் அடைந்தார். கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வலது காலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதைதொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடையவே ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ப்ரியா உயிரிழந்தார்.

2 மருத்துவர்கள் :

மருத்துவர்களின் கவனக்குறைவின் காரணமாக ப்ரியா உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குநர் சாந்திமலர் உத்தரவிட்டார்.

அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மருத்துவர்களும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ப்ரியா மரணம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால்ராம் சங்கர் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. முன்னதாக, மருத்துவர்கள் பணியில் கவனக்குறைவாக இருந்தார்களா? என விசாரணை நடத்த வேண்டும் என அரசு தரப்பு தெரிவித்திருந்தது.  

ஜாமீன் மறுப்பு:

சரண் அடைவதற்காக காவல்நிலையம் செல்லவே ஆபத்தாக உள்ளது. மிரட்டல் வந்த வண்ணம் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை கேட்ட நீதிமன்றம், மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும். வேண்டுமானால் சரண் அடையுங்கள் என நீதிபதி தெரிவித்தார். 

"தற்போதுதான் சம்பவம் நடைபெற்றிருப்பதால் விசாரணை நடத்த அவகாசம் வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது. மருத்துவர்கள் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது" என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

ப்ரியா மரணம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணை பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ப்ரியா மரணம் தொடர்பான வழக்கை மனித உரிமைகள் ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் விசாரணைக்கு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2 பேரை பிடிக்க 3 தனிப்படை

இந்நிலையில் கால்பந்து வீராங்கணை ப்ரியாவின் மரணத்தில் தொடர்புடைய இரண்டு மருத்துவர்களும் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு காவல் துறை தலைமைறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களையும் தேடிப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் பெரும் கவனம் பெறுவதால் காவல்துறைக்கும் அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 


மேலும் படிக்க., 

Football Player Priya Death : கால்பந்து வீராங்கனை மரணம் : "வேண்டுமென்றால் சரணடையுங்கள்.." - மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Breaking News LIVE: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Breaking News LIVE: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Entertainment Headlines: வசூல் வேட்டையில் கல்கி! தங்கலான் ரிலீஸ் எப்போது? சினிமா செய்திகள் இன்று
Entertainment Headlines: வசூல் வேட்டையில் கல்கி! தங்கலான் ரிலீஸ் எப்போது? சினிமா செய்திகள் இன்று
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
Embed widget