மேலும் அறிய

மேல்மலையனூரில் மின் கோபுரத்தில் விவசாயி தற்கொலை-இழப்பீடு தராமல் ஒப்பந்ததாரர் ஏமாற்றியதாக புகார்

’’தனது நிலத்தில் மின் கோபுரம் அமைக்கப்பட்ட நிலையில் ஒப்பந்ததாரர் இழப்பீட்டு தொகை தராமல் ஏமாற்றியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை என புகார்’’

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கலிங்கமலை கிராமத்தை சேர்ந்தவர் மணி (57). விவசாயி. இவருடைய நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்ததாரர்  ஒருவர்  10 லட்சம் தருவதாக கூறியுள்ளார். பின்னர் கடந்த ஆண்டு முன்பணமாக ஒரு லட்சத்தை மணியிடம் அந்த ஒப்பந்ததாரர் கொடுத்து மின் கோபுரம் அமைக்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மணி சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் மணி தனது நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், கட்டிட வேலைக்காக சென்னைக்கு சென்றார்.


மேல்மலையனூரில் மின் கோபுரத்தில் விவசாயி தற்கொலை-இழப்பீடு தராமல் ஒப்பந்ததாரர் ஏமாற்றியதாக புகார்

இந்த நிலையில் நேற்று மாலை  தனது நிலத்திற்கு மணி சென்றார். அப்போது அங்கு உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்த ஒப்பந்ததாரரிடம், தனக்கு தரவேண்டிய இழப்பீட்டு தொகையை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக அங்கிருந்த தொழிலாளர்கள் செயல்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த மணி, அங்குள்ள 200 அடி உயர் மின்கோபுரத்தில் ஏறி கயிற்றில் தூக்குப்போட்டு கொண்டார்.  இதைபார்த்த ஒப்பந்ததாரர் மற்றும் பணியில் இருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனிடையே அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த 2 பேர் உயர் மின் கோபுரத்தில் ஏறி மணியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மணி தூக்கில் தொங்கியவாறே இறந்தது தெரிந்தது. இதையடுத்து மணியின் உடலை தூக்கில் இருந்து இறக்கி அங்கேயே கீழே விழாதபடி கட்டி வைத்தனர்.


மேல்மலையனூரில் மின் கோபுரத்தில் விவசாயி தற்கொலை-இழப்பீடு தராமல் ஒப்பந்ததாரர் ஏமாற்றியதாக புகார்

இது குறித்த தகவலின் பேரில் செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணியின் உடலை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மணியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், உரிய இழப்பீடு வழங்கினால்தான் உடலை கீழே இறக்க அனுமதிப்போம் என்று கூறி அங்குள்ள கலிங்கமலை கூட்டு சாலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத், தாசில்தார் நெகருன்னிசா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய இழப்பீடு பெற்றுத்தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேல்மலையனூரில் மின் கோபுரத்தில் விவசாயி தற்கொலை-இழப்பீடு தராமல் ஒப்பந்ததாரர் ஏமாற்றியதாக புகார்

அதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய காவலர் சாமளவண்ணன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உயர் மின்கோபுரத்தில் இருந்த மணியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இது குறித்து வளத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

அடுத்த 24 மணி நேரம் உஷார் - தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை - சென்னையின் நிலவரம் என்ன?
அடுத்த 24 மணி நேரம் உஷார் - தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை - சென்னையின் நிலவரம் என்ன?
தேர்தலுக்கு முன்பு 'அண்ணன்'.. இப்போது வாய் திறக்காதது ஏன்? - விஜயை நோக்கி தினகரன் எழுப்பிய அடுக்கடுக்கு கேள்விகள்
தேர்தலுக்கு முன்பு 'அண்ணன்'.. இப்போது வாய் திறக்காதது ஏன்? - விஜயை நோக்கி தினகரன் எழுப்பிய அடுக்கடுக்கு கேள்விகள்
Nainar Nagendran: காங்கிரஸ் பினாமியாக தவெக.. விஜயை விளாசியெடுத்த நயினார் நாகேந்திரன்!
Nainar Nagendran: காங்கிரஸ் பினாமியாக தவெக.. விஜயை விளாசியெடுத்த நயினார் நாகேந்திரன்!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget