மேலும் அறிய

கணவர் மறைவுக்குப் பின் அதிர்ச்சி! ₹98 லட்சம் பெற போராடிய மனைவி - நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு

உடல் நல பாதிப்பு எதுவும் இல்லை என்று பொய் தகவல் அளித்ததாக கூறி , இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி காப்பீட்டு தொகை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு , தொகையை வழங்க கோரி உத்தரவு

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சுவேதா போத்திராஜ். இவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் என் கணவர் சிரெயாஸ். சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2020 - ல் ஐ.சி.ஐ.சி.ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் வாயிலாக ஒரு கோடி ரூபாய் காப்பீடு செய்திருந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக 2022 - ல் உயிரிழந்தார். காப்பீட்டு தொகை ஒரு கோடி ரூபாய் கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மனு அளித்தேன்.

உண்மை மறைப்பு ? விண்ணப்பம் நிராகரிப்பு

காப்பீடு செய்யும் முன் தனக்கு எந்த வித உடல் நல பாதிப்பும் இல்லை என உண்மையை மறைத்து உத்தரவாதம் அளித்ததாகக் கூறி , காப்பீடு தொகை கோரிய எனது விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்தது. கடந்த 2019 - ல் கணவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கல்லீரல் பாதிப்பு குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனவே காப்பீட்டு தொகையை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிரீமியம் தொகை மட்டுமே வழங்கப்படும்

இந்த மனு மீதான விசாரணை ஆணைய தலைவர் கோபிநாத் , உறுப்பினர்கள் கவிதா கண்ணன் , ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது ,  காப்பீடுதாரர் பொய்யான உத்தரவாதத்தை அளித்திருக்கும் பட்சத்தில் அவர் செலுத்திய பிரிமியம் தொகை மட்டுமே , அவருக்கு திரும்ப வழங்கப்படும். அந்த வகையில் , மனுதாரரின் கணவர் செலுத்திய பிரிமீயம் தொகை 1.71 லட்சம் ரூபாய் திரும்ப வழங்கப்பட்டு விட்டது என இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காப்பீட்டு தொகை 98.28 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்

விசாரணைக்கு பின் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் , மனுதாரரின் கணவர் அளித்ததாக கூறப்படும் அசல் உத்தரவாத படிவம் , இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் இன்சூரன்ஸ் நிறுவனம் கூறுவது போன்று மனுதாரரின் கணவர் பொய்யான உத்தரவாதம் அளித்தார் என்ற முடிவுக்கு வர இயலவில்லை. இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்தது நியாயமற்றது. எனவே மனுதாரருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கனவே வழங்கிய பிரிமியம் தொகை போக மீதமுள்ள காப்பீட்டு தொகை 98.28 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும். இழப்பீடாக 25,000 ரூபாய் , வழக்கு செலவு தொகையாக , 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Schools Colleges Leave: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Schools Colleges Leave: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Embed widget