மேலும் அறிய

CM Stalin on Lockdown : முழுமையான ஊரடங்கை உறுதிசெய்யவும் - மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் தமிழகத்தில் எந்த தளர்வும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர்,

”தமிழகத்தில் நாளை முதல் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு நடக்கும் கூட்டம் இது. இந்த தொற்று நோய் காலத்தில் மாவட்டங்களில் மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை, மற்றும் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் சிறப்பாக செயலாற்றி வரும் உங்களுக்கு பாராட்டுக்கள். கொரோனா நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அது முழுமையாக அனைத்து மக்களுக்கும் சென்று சேர்ந்துவிட்டதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முதலில் உறுதிசெய்ய வேண்டும். நாளை முதல் நமது மாநிலத்தில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த சூழலில், மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் குடிநீர் போன்ற தேவைகளை வழங்க சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு தேவையான தரமான உணவுப்பொருட்கள், பால், குடிநீர் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து இடங்களிலும் பால் மற்றும் குடிநீர் விநியோகம் சீராக இருப்பதை பார்த்துக்கொள்ளவேண்டும்.


CM Stalin on Lockdown : முழுமையான ஊரடங்கை உறுதிசெய்யவும் - மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

வீதிகளில் வாகனம்/ தள்ளுவண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வேளாண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் கண்காணித்து வரவேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலமாக வீட்டுக்கு வீடு சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து நோய்த்தொற்றை கண்டறியும் முகாம்கள் நடத்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். நோயாளர்கள், நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை ஆகியவற்றை அடைவதில் போக்குவரத்து சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகளை எந்தவித தொய்வுமின்றி மேற்கொண்டு செல்லும் நடவடிக்கைகளை தொடரவேண்டும்.

மக்களிடையே நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை அயராது தொடர வேண்டும்.


CM Stalin on Lockdown : முழுமையான ஊரடங்கை உறுதிசெய்யவும் - மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஊரடங்கு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அதேசமயம் அனுமதிக்கப்பட்ட பணிகளான விவசாய இடுபொருட்கள், வேளாண் விளைபொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்து எந்த தடையும் இல்லாமல் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் மாவட்டங்களில் உள்ள மக்களவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்துக்களை பெற்றும் கட்டுப்பாடு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தும் செயல்படலாம்.

அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் இருப்பைத் தொடர்ந்து கண்காணித்து அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து மாவட்டத்தில் நோய்த்தொற்று சதவீதத்தை குறைப்பது ஒன்றே குறிக்கோளாக செயல்படவேண்டும்.

இந்த காலத்தில் அரசுடன் இணைந்து செயலாற்ற பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றன. மாவட்ட அளவில் அவர்கள் பணியை ஒருங்கிணைத்து மக்களுக்கு அவர்களின் சேவையை கொண்டு சேர்க்க நீங்கள் தனி கவனம் செலுத்தவேண்டும். அதற்கென மாவட்ட அளவில் ஒரு தனி அலுவலரை நியமிக்கலாம்.


CM Stalin on Lockdown : முழுமையான ஊரடங்கை உறுதிசெய்யவும் - மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

தமிழ்நாட்டு மக்களின் உயிர்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு, அது மேலும் பரவாமல் தடுப்பதற்கு அதன் சங்கிலி உடைக்கப்பட வேண்டும். ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவும் அந்த சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. அதற்காகவே, இந்த முழு ஊரடங்கு. பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவே இந்த ஊரடங்கு. மாவட்ட ஆட்சியர்கள், உங்களது இத்தனையாண்டு கால அனுபவம், அறிவு, சக்தி, திறமை அனைத்தையும் முழுமையாக பயன்படுத்தி கொரோனா தடுப்பு பணிகளை ஆற்றவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
60 வயதிலும் தீராத ஆசை.. வீட்டுக்கே சென்று டார்ச்சர்.. முதிய பெண்மணி கொலை!
60 வயதிலும் தீராத ஆசை.. வீட்டுக்கே சென்று டார்ச்சர்.. முதிய பெண்மணி கொலை!
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
Embed widget