மேலும் அறிய

Gram Sabha Meeting: “மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான்” - கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் பேச்சு..!

மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. 

மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அதனை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

கிராம சபை கூட்டங்கள்

சுதந்திர போராட்ட வீரரும், தனது அகிம்சை வழியால் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் காந்தியடிகள். 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த காந்திக்கு இன்று 154வது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கிராம சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. 

அதில், “இந்த அரசு  மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த 4 கிராம சபை கூட்டங்களின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. மேலும் கிராமங்களில் தான் இந்தியா  வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள்  நடைபெற உள்ளது. இதில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதேசமயம் பொதுமக்களை இதுபோன்ற கிராமசபை கூட்டங்களுக்கு வரவழைக்கும் வகையில் கிராமசபை கூட்ட அழைப்பிதழ்  வடிவமைக்கப்பட்டு, பல ஊராட்சிகளிலும் வீடு தோறும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மகளிர் நலன், காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத் தொகை, விவசாயிகள் நலன்,நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் குறும்படங்கள் ஒளிபரப்பி மக்களிடையே காட்சிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள்

கிட்டதட்ட தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது இந்த கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் தனது உரையில், “கிராம சபை கூட்டங்களை திமுக அரசு முறையாக எந்தவித தடங்கலும் இன்றி நடத்திக்கொண்டு வருகிறது. கிராம மக்களின் குரல் எந்த சூழ்நிலையிலையும் தடையின்றி ஒலிக்க வேண்டும் என்று தான் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருகிறது. மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கும் உத்திரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயக தேர்தல் முறை பிறந்த தொட்டில் என வரலாறு சொல்கிறது. குடவோலை முறையால் தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி அமைப்பு மலர்ந்துச்சு. அந்த வகையில் கிராமங்களில் தான் மக்களாட்சி முதல் முறையாக தோன்றியது. கிராம சபை கூட்டம் என்பது சோழ பேரரசு காலம் தொட்டே வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த பேரரசில் ஊர் மற்றும் மகாசபை என்ற இரு அவைகள் இருந்துச்சு. இதில் மகா சபை தான் தற்போதைய கிராம சபை. மக்களாட்சியின் ஆணி வேராக இருப்பது கிராம சபை கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து தங்களுடைய தேவைகளையும், பயன்களையும் விவாதித்து வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலேயும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்” என தெரிவித்தார்.  

இன்று ஒவ்வொரு மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். கிராமசபை கூட்டத்துக்கான வழிகாட்டுதல்கள்  அனைத்து ஊராட்சிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஊராட்சிகளின் நிதிநிலை அறிக்கை தொடங்கி டெங்கு காய்ச்சல் தடுப்பு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரககுடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம் ஆகியவை பொதுப் பொருளாக வைத்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


மேலும் படிக்க: Gandhi Jayanti 2023: மக்களின் உரிமைக்குரல்.. அகிம்சையின் அடையாளம்.. “காந்தி மகான்” பிறந்த தினம் இன்று..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget