மேலும் அறிய

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு, தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ந் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுககு முன்பு பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் 17-ந் தேதி நேரில் சந்திக்க உள்ளார் என்று அறிவிப்பு வௌியானது.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் பயணமாக இன்று டெல்லி சென்றார். அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் எடுத்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது உள்ள கொரோனா பாதிப்பு நிலவரம், அதை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், கொரோனா பரவலை இன்னும் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக பிரதமரிடம் முதல்வர் எடுத்துக்கூற உள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 1 கோடிக்கு மேற்பட்டோர்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு போதியளவில் கோவாக்ஷின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை முதல்வர் இந்த சந்திப்பில் வலியுறுத்த உள்ளார்.

இது மட்டுமின்றி, தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதனால், இந்த சந்திப்பின்போது செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுக்க உள்ளார்.


பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பின்னனர், தமிழக்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்களின் வாழ்வாதார பாதிப்பு, தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, இதன் காரணமாகவும், மக்களுக்கு அளித்துள்ள நலத்திட்ட மற்றும் நிவாரண உதவிகளால் தமிழக அரசுக்கு ஏற்பட்டு நிதி நெருக்கடி குறித்தும், இதனால் மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்தும் கோரிக்கை விடுக்க உள்ளார்.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு பூஞ்சை நோயால் தமிழகமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நோய்க்கு மருந்தான ஆம்போடெரிசின் பி யை போதியளவில் தமிழகத்திற்கு ஒதுக்கவும் பிரதமர் மோடியை முதல்வர் வலியுறுத்த உள்ளார்.

இதுதவிர, ஊரடங்கால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, நடப்பாண்டில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு சேர்க்கை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதுதவிர, தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. வரி வருவாய் பாக்கி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த சந்திப்பின்போது, மூத்த அமைச்சரான துரைமுருகன் உடன் உள்ளார். மேலும், இந்த சந்திப்பிற்கு பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள் சிலரையும் நேரில் சந்திக்க உள்ளார்.

மேலும் படிக்க : Shiva Shankar Baba : கைதுசெய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்!

 

 

 

 

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Embed widget