மேலும் அறிய

SivaShankar Baba : கைதுசெய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்! நடந்தது என்ன?

மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்ற சிவசங்கர் பாபாவின் மனுவை நிராகரித்த செங்கல்பட்டு நீதிமன்றம்!

ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அனுமதி தேவை என சிவசங்கர் பாபா தரப்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு. நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை கொண்டுவரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் இரவு முழுவதும் தொடர் விசாரணை மேற்கொண்டனர், அதன் பின்னர் இன்று காலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாலை 4.20 மணி அளவில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜர் செய்யப்பட்டார். அப்போது தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அனுமதி தேவை என சிவசங்கர் பாபா தரப்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி அம்பிகா அதனை நிராகரித்தார். இந்நிலையில் சிபிசிஐடியினர் அவரை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

SivaShankar Baba : கைதுசெய்யப்பட்ட  சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்! நடந்தது என்ன?

மேலும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர் செய்யப்பட்டபோது அவரின் ஆதரவாளர்கள் பலர் நீதிமன்ற வாயிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் சிவசங்கர் பாபா ஆதரவாளர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.

சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டது எப்படி ?

முன்னதாக சிவசங்கர் பாபா தப்பி ஓட திட்டமிட்டதாக தகவல் வந்ததை அடுத்து டில்லி விரைந்தது தனிப்படை, அங்குள்ள போலீஸ் உதவியுடன் காசியாபாத்தில் ஈஸியாய் சிவசங்கரை தூக்கினர். போலீசார் தன்னை நெருங்குவார்கள் என சற்றும் நினைக்காத பாபா, பேபே என விழித்தார். புகாரை கூறி, அவரை கைது செய்வதாக போலீசார் கூற, தன் வசம் வேறு பாயிண்ட் எதுவும் இல்லாத நிலையில், விரல் பிடித்து நடக்கும் குழந்தை போல அவர்கள் பின் நடந்தார் சிவசங்கர் பாபா. 

இதனைத் தொடர்ந்து, அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தபின்னர், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று  ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்றிரவு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 

மேலும் அறிய : சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது உண்மை - சிபிசிஐடி தகவல்

இந்நிலையில், சிவசங்கர் பாபாவிடம் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடைபெற்றது. பெண் ஆய்வாளர் உட்பட 5 அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வீடியோ பதிவு செய்துள்ளனர். விசாரணையில்,  சிவசங்கர் பாபாவுக்கு டேராடூன் மருத்துவமனையில் ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது உறுதியானது. மாரடைப்பு காரணமாகவே மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்தது. அதன் பின்னர் இன்று காலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாலை 4.20 மணி அளவில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜர் செய்யப்பட்டார். சிபிசிஐடியினர் அவரை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விசாரணையில் சிவசங்கர் பாபாவிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Embed widget