Chennai Power Cut: சென்னையில நவம்பர் 1-ம் தேதி எந்தெந்த பகுதிகள்ல மின்சாரம் இருக்காதுன்னு தெரிஞ்சுக்கோங்க
Chennai Power Cut(01-11-2025): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், நவம்பர் 1-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமணி
- எம்ஜிஆர் சாலை
- சாந்தியப்பன் சாலை
- கோதண்டராமன் தெரு
- பெருங்குடி
- ஓஎம்ஆர்
- காமராஜர் நகர்
- குறிஞ்சி நகர்
- அண்ணா நெடுஞ்சாலை
- நேரு நகர்
- கொட்டிவாக்கம்
- சீனிவாசா நகர்
- ஜெயேந்திரா காலனி
- திருவள்ளுவர் தெரு
- கற்பக விநாயகர் தெரு
- டெலிபோன் நகர்
- சர்ச் ரோடு
- சிபிஐ காலனி
பல்லாவரம்
- ஜமீன் ராயப்பேட்டை
- செந்தில் நகர்
- சக்தி நகர்
- குறுஞ்சி நகர்
- அருள்முருகன் ராமமூர்த்தி நகர்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















